search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமி வீதியுலா"

    • திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே கொண்டல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் அம்பாள் திருக்கல்யாணம், சுவாமி வீதிஉலா, படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

    அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தீ மிதித்த பக்தர்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    அப்போது ஏராளமான பக்தர்கள் சாட்டையடி பெற்று சென்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்
    • ஆலங்குடியில் அய்யப்ப சுவாமி வீதியுலா நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அய்யப்பன் கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை, புரட்டாசி, சித்திரை மாதங்களில் இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொள்வார்கள். கார்த்திகை மாதத்ததை முன்னிட்டு மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தர்கள் சார்பில் அய்யப்பன் வீதி உலா நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளம் மற்றும் வான வேடிக்கை முழங்க அய்யப்பன் வீதியுலா நடைபெற்றது. அய்யப்பன் கோயிலில் புறப்பட்ட இந்த வீதி உலாவானது சந்தைப்பேட்டை பேருந்து நிலையம், அரசமரம் பஸ்ஸ்டாப், வடகாடு முக்கம் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அய்யப்பனின் வீதியுலா நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆலங்குடி கா வல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    ×