search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுவட்டார பகுதிகளில்"

    • கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை கோபி, அந்தியூர் மற்றும் பவானி,சத்தி,பாசன பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் முதல் போக நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45,சம்பா,பொன்னி உள்ளிட்ட ரகங்கள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தற்சமயம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பங்களாபுதூர், டி.என் .பாளையம்,பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாகுறை காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தற்போது நெல் அறுவுடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..

    விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும்நெல்லை கொள்முதல் செய்வ–தற்காக, கோபியில், கூகலூர், நஞ்சகவுண்டன் பாளையம், புதுவள்ளியாம் பாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க–பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்,

    மேலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்திருப்பதால் தஞ்சை, திருவாருர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கபட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது..

    மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும்.

    இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×