search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபிசெட்டிபாளையம்"

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் சென்னி. இவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 30).இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    வெள்ளோடு அருகே உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சங்கீதா (21). இவரும் அதே மில்லில் வேலை செய்து வந்தார்.

    இருவரும் ஒரே மில்லில் வேலை செய்து வந்ததால் இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூற ப்படுகிறது.

    இவர்கள் 2 பேரும் பழகி வந்தது. அவர்களின் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து காதல் ஜோடியினர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கலிங்கியம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதை தொடர்ந்து அவர்களின் பெற்ேறாரை போலீஸ் நிலையத்துக்கு வர வழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து காதல் ஜோடியை அவர்க ளுடன் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் தீபிகா (21). பி.காம். பட்டதாரியான தீபிகாவின் தாய் உணவகம் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.இவரது மகன் கதிரேசன் (27). சரக்கு ஆட்டோ டிரைவரான க திரேசன் அடிக்கடி தீபிகாவின் தாய் நடத்தி வந்த உணவகத்திற்கு சாப்பிட சென்று வருவார். அப்போது, கதிரேசனுக்கும் தீபிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இவர்களது காதலுக்கு பெற்றோரிடம் எதிர்ப்பு கிளம்பியது.

    அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ நிலைய போலீசார் இரு தரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மணமகன் வீட்டிற்கு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வேண்டியும் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

    இதனையடுத்து கவுன்சிலர்கள் 13 பேரும் கூட்ட த்தில் இருந்து வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் நின்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.

    பின்னர் சிறுது நேரம் கழித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளே சென்ற னர். அப்போது நகர்மன்ற தலைவர் கூட்டம் முடிந்தது என்று சொன்னவுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்கால்களிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை கோபி, அந்தியூர் மற்றும் பவானி,சத்தி,பாசன பகுதிகளுக்கு உட்பட்ட சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் முதல் போக நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    ஏ.எஸ்.டி., 16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45,சம்பா,பொன்னி உள்ளிட்ட ரகங்கள் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

    தற்சமயம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பங்களாபுதூர், டி.என் .பாளையம்,பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் பற்றாகுறை காரணமாக எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தற்போது நெல் அறுவுடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்..

    விவசாயிகள் தங்கள் அறுவடை செய்யும்நெல்லை கொள்முதல் செய்வ–தற்காக, கோபியில், கூகலூர், நஞ்சகவுண்டன் பாளையம், புதுவள்ளியாம் பாளையம், புதுக்கரைபுதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்க–பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யும் நெல்களை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து வருகின்றனர்,

    மேலும் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமாக நெல் சாகுபடி செய்திருப்பதால் தஞ்சை, திருவாருர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கபட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது..

    மேலும் உரம், பூச்சி மருந்து, ஆட்கூலி ஆகியவற்றின் விலை உயர்ந்து உள்ளதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் வரும் காலங்களில் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும்.

    இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை குறைத்து மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லிற்கு கூடுதல் விலை கொடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .
    • முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பச்சைமலை ரோட்டில் உள்ள கோட்டை முனியப்ப சாமி, கன்னிமார், கருப்பராயன் சுவாமி, கோவில் 11-ம் ஆண்டு ஆடித்திருவிழா இன்று நடந்தது .

    இதையொட்டி 18-ந் தேதி கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை அபிஷேக பூஜை, மற்றும் கன்னிமார், பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், பெருபூஜை, கிடாய் வெட்டுதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோபி, மொடச்சூர் நாயக்கன் காடு, கரட்டூர் பாரியூர்மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    ×