search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
    X

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

    • கோபிசெட்டிபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடை பெற்றது.
    • கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும் வெளிநடப்பு செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் பிரேம்ஆனந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் மின் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வேண்டியும் கையில் பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

    இதனையடுத்து கவுன்சிலர்கள் 13 பேரும் கூட்ட த்தில் இருந்து வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் நின்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர்.

    பின்னர் சிறுது நேரம் கழித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளே சென்ற னர். அப்போது நகர்மன்ற தலைவர் கூட்டம் முடிந்தது என்று சொன்னவுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×