என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் பலி"
- மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.
- மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் பல பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளை பார்ப்பதோடு, கடலில் ஆனந்த குளியலிடுவதும் வழக்கம்.
கடந்த சில நாட்களாக கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாகவும் ,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாகவும் இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அவர்கள் கடலில் இறங்கி ஆனந்தமாக நீராடினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு பெண் உள்பட 3 பேர் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரு டெக்னோ பார்க் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் மணி (வயது 30), சுரேஷ் (30), பிந்து (25) உள்பட 10 பேர் நேற்று சுற்றுலாவாக வேனில் கன்னியாகுமரி வந்தனர்.
தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள் இன்று பகல், கன்னியாகுமரி கோவளம் கடற்கரை பகுதியை பார்க்க புறப்பட்டனர்.
அப்போது கடல் அலை வேகமாக இருந்தது. இருப்பினும் அந்த பகுதியில் ஏராளமானோர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் மணி, சுரேஷ், பிந்து ஆகியோருக்கும் குளிக்கும் ஆசை வந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரும் கடலில் குளிக்க இறங்கினர். அவர்கள் ஆனந்தமாக குளித்துக்கொண்டிருந்தபோது, ராட்சத அலை வந்தது. அந்த அலையில் 3 பேரும் சிக்கினர்.
இதனை பார்த்த கடலில் குளித்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதனை கேட்ட மீனவர்கள் மற்றும் சிலர் துணிச்சலாக செயல்பட்டு 3 பேரையும் மீட்க முயன்றனர். அவர்களால் பிந்துவை மட்டுமே மீட்க முடிந்தது.
மணி மற்றும் சுரேசை கடல் அலை இழுத்துச் சென்று விட்டது. இதுபற்றி கன்னியாகுமரி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மற்றொரு அலை 2 பேரும் கடற்கரைக்கு கொண்டு வந்து வீசியது. அவர்களை உடனடியாக மீனவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மணி மற்றும் சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிந்து, கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடலில் மூழ்கி 2 சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் கன்னியாகுமரியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு தமிழகம்மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனையம், அறப்பரளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்த்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள மாசிலா அருவி பசுமை சுற்றுச் சூழல் திட்டத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறை மூலம் நடைபாதை, பொழுது போக்கு பூங்கா, உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தற்சமயம் சுற்றுலா பயணகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை நாட்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ள மாசிலா அருவிக்கு சென்று குளிப்பது, செல்பி மற்றும் வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பாறைகளில் வழுக்கி தவறி விழுந்து அடிப்படுவது போன்ற சம்பவங்களும் நடப்பது உண்டு.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால் (வயது 22) என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார்.
அவர் தடைசெய்யப்பட்ட மாசிலா அருவியின் மேல் பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று குளித்துள்ளார். அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக தனது ஊரில் உள்ள நண்பர்களுடன் பேசியுள்ளார். அப்போது திடீரென கால் வழுக்கி அங்குள்ள 70 அடி பள்ளத்தில் விழுந்து குணால் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த் (23), நிதிஷ்காந்த் (21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் மோட்டார் சைக்கிளில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது அங்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் 500 படிக்கட்டுகளை கடந்து சென்றபோது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடம் வந்து நிதிஷ்காந்தை மீட்டு சேம்மேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்