search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுச்சூழல் விருது"

    • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.
    • ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேன்மை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 2022-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது.

    விருதுகள் விவரம் வருமாறு:-

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு-முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும்கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபர்கள் இதற்கு தகுதியடையவர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-தனிநபர்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள்.

    சுற்றுச்சசூழல் பாதுகாப்பு -மேலாண்மை-நிறுவனம்.முதல் பரிசு ரூ.15000,2-வது பரிசு ரூ.10,000, 3-வது பரிசு ரூ.7500. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள்.

    சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரை, பரிசு தொகை ரூ.15000. சுற்றுச்சூழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள்.

    அனைத்து விண்ணப்பதாரர்களும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் வருமாறு:-

    விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரிவின் கீழ் கடந்த ஆண்டு 01-01-2022 முதல் 31-2-2022 வரை உள்ள தகுதி காலத்திற்குள் தனிநபர் -நிறுவனம் செய்த பணிகள் மட்டுமே விண்ணப்பத்தில் இடம் பெற வேண்டும். தனிநபராக இருப்பின் தமிழக அரசால் வேறு எந்த விருதுகளுக்கும் அனுப்பப்படாத பணிகளின் விவரம், அவற்றின் பயன் மற்றும் விவரங்களை அறிக்கையுடன் இணைத்தல் வேண்டும்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேண்மை பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர் சி நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட 1-1-2022 முதல் 31-12-2022 வரை உள்ள காலகட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச்சார்ந்த பிரசுரங்கள், பத்திரிக்கை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள் , பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும். மேற்கண்ட களப்பணியை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் ,தேர்வுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள்.ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் , நிறுவனம் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட நான்கு பிரிவிற்கும் அப்பிரிவின் எதிரே குறிப்பிட்டுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்தநபர்கள், நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மேற்கண்ட நான்கு பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் உள்ள தனித்தனி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    ஏற்கனவே சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நபர்கள்,நிறுவனங்கள் மீண்டும் விருதுகள் பெற விண்ணப்பிக்க இயலாது.

    சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான தனி விதிகள்:-

    சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஊக்குவிக்கும் வண்ணம் 2022-ம் ஆண்டு ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2022-ம் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றிற்கு மேற்ப்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சிக்கட்டுரைக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு மடலும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஆராய்ச்சி கட்டுரைகள் தமிழிலும் / ஆங்கிலத்திலும் தரமான ஆராய்ச்சி ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.ஆங்கில கட்டுரையானால் ஆராய்ச்சி கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட வேண்டும்.இதற்கு ஆதாரமாக எந்த ஆராய்ச்சி ,அறிவியல் ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டது என்று விவரம் அளித்தல் வேண்டும்.இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறைக்குள் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்தபுத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்திருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.ஆராய்ச்சிக் கட்டுரையின் 6 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

    ஏற்கனவே விருது பெற்ற தனிநபர் ஒன்றிற்கு மேற்பட்டோர் மீண்டும் விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பிக்கும் முறை:-

    விண்ணப்பத்துடன் செயலாக்கத்தினை உறுதிபடுத்தும் வகையில், பிரசுரச்சீட்டுகள், ஊர்வலங்கள் மற்றும் நிழற்படங்கள்,மற்ற அவசிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.விண்ணப்பங்கள் மற்றும் அதன் இணைப்புகள் நூலால் உறுதியாக தைக்கபட்டிருக்கவேண்டும்.ஸ்டேப்ளர்பின் கொண்டு இணைக்கப்படக்கூடாது.இணைக்கப்பட்ட ஆவணங்களின் எண்ணிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநரக வளையதளத்தில் (www.environment.tn.nic.in) இருந்து 15.8.2023பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். வலைதள முகவரி தொலைபேசி எண்-www.environment.tn.nic.in- 2433 6421.

    விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யும் கடைசி நாள் -15.8.2023.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்வந்து சேர வேண்டிய கடைசி நாள்-21.8.2023.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 6 நகல்களில் இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை' (Director, Department of Environment and Climate Change)என்ற பெயரில் ரூ.100 க்கான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்களையும் இணைத்து அனுப்பவேண்டும்.இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.8.2023 அன்று மாலை 5 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்று பேராசிரியர் சுதாகரன் பேசினார்.
    • அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விருது விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்வர் வனிதா மற்றும் கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் சுதாகரன் பங்கேற்று பேசுகையில், இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், மாணவர்கள் சுயமாக சிந்திக்கவும், எழுதவும் படிக்க வேண்டும் என்றார். முன்னதாக அவருக்கு பள்ளி கல்வி குழும செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். மாணவி கவுசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மாணவன் ஜெர்வீன் சாம் ராஜ் வரவேற்று பேசினார்.

    இதில் இயற்கையை பாதுகாக்கும் விதமாக பேராசிரியர் சுதாகரன் இயற்கை கழகத்தினை தொடங்கி வைத்து அனைவரும் இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து பரணிதரன் குழுவினர் இயற்கையை பாதுகாப்பு பற்றி நாடகம் நடத்தினர்.துவிதி குழுவினர் குறு நாடகம் நடத்தினர். மீனாட்சி குழுவினர் நடனம் ஆடினர். அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவன் நிகிஸ்ராம் நன்றி கூறினார். கலந்து கொண்ட மாணவர்களையும், பரிசு பெற்றவர்களையும் பள்ளி கல்வி குழும தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன் மற்றும் முதல்வர் வனிதா பாராட்டினர்.

    ×