search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுயஉதவிக் குழு"

    • முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
    • மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    விழுப்புரம்:

    புதுவை அரசு சார்பில் ரூ.2638 கோடி கடன் 1.42 லட்சப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தாகூர் அரசு கலைக் கல்லூரியில் நடந்த விழாவிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமை தாங்கினார். இதில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் புதுவையைச் சுற்றியுள்ள 141 சுய உதவிக் குழுக்களின் 1672 உறுப்பி னர்களுக்கு பவ்டா நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, முதுநிலை பொது மேலாளர் சாந்தாராம் ஆகியோரிடம் ரூ. 9.30 கோடிக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

    இந்த கடிதம் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன், துணை பொது மேலாளர் ஜனதீஸ்வர் காரி, துணை பொது மேலாளர் கல்பனா முதலியார், சேலம், மண்டல பொறுப்பாளர் சதீஷ் பாபு ஆகியோர் முன்னிலையில்  வழங்கப்பட்டது.பவ்டா நிதி நிறுவனத்தின் சார்பில் முதுநிலை உதவிப் பொது மேலாளர் சிவராஜ், உதவிப் பொது மேலாளர் மகேஷ்வரி, முதுநிலை உதவிப் பொது மேலாளர் சங்கர், உதவிப் பொது மேலாளர்கள் பிரேம்குமார், கார்திக்கேயன், கிளை மேலாளர்கள் பிரபாவதி, முருகன், முருகேஷ், ஹரி கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா
    • 512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    திருச்சியில் இன்று நடந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறி ஸ்தவ கல்லூரியில் நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

    512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும் மேயருமான மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மனோ தங்க ராஜ் வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வை யிட்டார்.

    ×