search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.47 கோடி கடன் உதவிகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வழங்கினார்
    X

    குமரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.47 கோடி கடன் உதவிகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வழங்கினார்

    • மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா
    • 512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    திருச்சியில் இன்று நடந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சி மற்ற மாவட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் வழங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் மகளிர் சுய உதவிக்குழக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மற்றும் மாவட்ட அளவிலான வங்கி யாளர்கள் விருதுகள் வழங்கும் விழா இன்று நாகர்கோவில் ஸ்காட் கிறி ஸ்தவ கல்லூரியில் நடந்தது.

    விழாவிற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

    512 சுய உதவி குழுக்களுக்கு ரூ.46 கோடியே 90 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டது.இதன் மூலமாக 10417பேர் பயன் பெறுகிறார்கள்.

    விழாவில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செய லாளரும் மேயருமான மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார்,பிரின்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மனோ தங்க ராஜ் வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வை யிட்டார்.

    Next Story
    ×