search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன அதிபர்"

    • 80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாக கூறப்படுகிறது.
    • புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பெய்ஜிங்:

    வடக்கு எல்லையில் சீன படையுடன் இந்தியா சண்டையிட்டு வரும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவி வருகிறது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஷி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் 80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வணிகப் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால், ஜி ஜின்பிங்கின் கைது பற்றிய தகவல்கள் பெய்ஜிங்கிலும் உலகளாவிய இணையத்திலும் பரவுகின்றன.

    சீன அரசை ராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி சிலர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    சீனாவில் கிட்டத்தட்ட 60% விமானங்கள் எந்த விளக்கமும் இல்லாமல் வெள்ளிக்கிழமை தரையிறக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நியூஸ் ஹைலேண்ட் விஷனின் மற்றொரு தகவலில் முன்னாள் சீன அதிபர் ஹு ஸின்டாவோ மற்றும் முன்னாள் பிரதமர் வென் ஜிபாவோ ஆகியோர் சீன அரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 22ஆம் தேதி, பெய்ஜிங் நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் ஊடகங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங், சீன ராணுவம் பெய்ஜிங்கை நோக்கி நகர்வதாகக் கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    எனினும், இந்த தகவல் அனைத்தும் அரசாங்கத்தால் உறுதி செய்யப்படவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகத்திலோ இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் வெளியாகவில்லை. எனினும், சீன அரசியலில் இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். "புதிதாக பரவும் வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்: ஜி ஜிங்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா? ஜி ஜின்பிங் சமீபத்தில் சமர்கண்டில் இருந்தபோது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கட்சியின் ராணுவப் பொறுப்பில் இருந்து ஜியை நீக்கியதாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் வதந்தி பரவுகிறது" என சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு சிலர் பதில் அளித்து, தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    • சீன அதிபர் ஜின்பிங் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.
    • சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் நடக்கிறது.

    பீஜிங்

    சீன அதிபர் ஜின்பிங், 2-வது தடவையாக அதிபராக இருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இருப்பினும், அதிபருக்கான 10 ஆண்டு பதவிக்கால உச்சவரம்பு கடந்த 2017-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. இதனால், ஜின்பிங் தனது ஆயுட்காலம் வரை அதிபராக இருக்கலாம்.

    சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாடு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். 2017-ம் ஆண்டுக்கு பிறகு, அடுத்த மாதம் இந்த மாநாடு நடக்கிறது.

    மாநாட்டில், கட்சியின் சட்ட திட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதிபர் ஜின்பிங்குக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவர் தற்போது, அதிபராக மட்டுமின்றி, ராணுவத்தின் தலைவராகவும், கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.

    இனிமேல், அவர் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக உயர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த நிறுவனர் மாவோ மட்டுமே கட்சி தலைவர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு பிறகு ஜின்பிங் தலைவர் ஆகிறார். ஏற்கனவே அவருக்கு 'முக்கிய தலைவர்' என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜின்பிங் இன்னும் 5 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கோ அதிபராக இருப்பதற்கு கட்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதுவரை, மறைந்த மாவோ மட்டுமே 2 தடவைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார். மாவோவுக்கு பிறகு அந்த பெருமையை ஜின்பிங் பெறுகிறார்.

    இதுதவிர, கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், புதிய பிரதமர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏனென்றால், தற்போதைய பிரதமர் லி கேகியாங் ஓய்வுபெற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    கட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் ஜின்பிங்கின் கரம் வலுவடையும் என்றும், அவருக்கு சவால்களே இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை
    • வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். அத்துடன் உலக மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்துவார்கள்' என்று சாடினார்.

    சர்வதேச மேலாதிக்கம், குழு அரசியல் மற்றும் கூட்டு மோதல்கள் அனைத்தும் அமைதியையோ, நிலைத்தன்மையையோ தருவதில்லை எனக்கூறிய ஜின்பிங், மாறாக போரையும், மோதலையுமே ஏற்படுத்துவதை வரலாறு காட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் போல்சொனாரோ உள்ளிட்டோரும் உரையாற்றுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

    ×