search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவலிங்கத்தை பெயர்த்து சென்ற வாலிபர்"

    முசாபர் நகர் அருகே சொத்துப் பிரச்சனை தீராததால் கோவிலுக்குள் புகுந்த வாலிபர் சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    முசாபர் நகர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள பிடஹெடி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் யாதவ். இவரது குடும்பத்தில் அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது.

    சிவ பக்தரான தீபக் யாதவ் சொத்துப் பிரச்சனை சுமூகமாக தீர வேண்டி வழிபாடு நடத்தி வந்தார். அவருக்கு சொத்துப் பிரச்சனை தீரவில்லை.

    இந்த நிலையில் மனவேதனை அடைந்த தீபக் யாதவ் தான் வழக்கமாக செல்லும் சிவன் கோவிலுக்கு சென்றார். அங்கு திடீர் என்று ஆவேசம் அடைந்த அவர் சிவலிங்கத்தை கடப்பாரையால் பெயர்த்து எடுத்தார். சிலையை தூக்கிச் சென்று சேதப்படுத்தினார்.

    முன்னதாக அவர் ஆவேசமாக சத்தம் போட்டு குரல் எழுப்பினார். இதைப் பார்த்து பூசாரியும் அங்கு இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீபக் யாதவை கைது செய்தனர். சிவலிங்கத்தை போலீசார் கைபற்றி கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கோவில் முன் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ×