search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் விரதம்"

    விரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
    அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி  'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’

    மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை  அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

    பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

    சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மகா சிவராத்திரி விரதத்தையும், மாதம் தோறும் வரும் சிவராத்திரி விரதத்தையும் அனுஷ்டிப்பது மிகவும் இருப்பது நல்லது.
    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

    “ஓம் நமசிவாய” என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்று கூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.

    நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மனம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    ஆடிக்கிருத்திகை, கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.
    ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
    ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் (அக்டோபர்-5 வியாழக்கிழமை), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான்.  அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

    அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

    புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.
    சிவபெருமானுக்கு கடைபிடிக்கப்படும் விரதங்களில் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று இந்த விரதத்தை முறையாக கடைபிடிக்கும் முறையை பார்க்கலாம்.


    prathosam viratham doing method

    prathosam viratham, prathosam, shiva viratham, viratham, பிரதோஷம், விரதம், சிவன் விரதம்,







    ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷங்கள் வரும். ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பகலில் விரதம் இருந்து பிற்பகல் 4.30க்கு மேல் சிவபெருமானை ரிஷபாரடராக தரிசனம் செய்ய வேண்டும்.

    சனிக்கிழமை பிரதோஷம் வரும் நாளில் உபவாசம் இருந்தால் குழந்தை பாக்கியமும், செவ்வாய்க்கிழமை இருந்தால் கடன் நிவர்த்தியும், ஞாயிற்றுக்கிழமை இருந்தால் தீர்க்காயுள், ஆரோக்கியம் ஆகியவையும் ஏற்படும்.

    இறைவன் தேவர்களைக் காக்க ஆலகால விஷம் உண்ட காலத்தைத் தான் பிரதோஷ காலம் என்பர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் தன் தேவியுடன், ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மும்முறை வலம் வருவார். அச்சமயம் முதல் சுற்றில் வேத பாராயணமும், இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் நடைபெறுவது ஐதீகம்.

    அச்சமயம் பக்தர்கள் அனைவரும் ‘ஓம் நமச்சிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓயாமல் சொல்ல வேண்டும். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும்போது பக்தர்களும் பின்னால் செல்வது நல்லது.

    கோவிலில் இருக்கும் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசியும், நெய் விளக்கும் வைத்து வழிபடுவது சாலச்சிறந்தது.

    பிரதோஷ காலத்தில் சிவலிங்கத்தை நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

    இவ்வாறு, பிரதோஷ காலங்களில் சோமசூக்தப் பிரதட்சிணம் என்னும் முறையில் வலம் வந்து இறைவனை வழிபட வேண்டும்.

    பிரதோஷ கால சோமசூக்தப் பிரதட்சணை முறை

    முதலில் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியாக சிவலிங்கத்தை தரிசனம் செய்துவிட்டு அப்பிரதட்சிணமாக சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி பிறகு பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வந்து, சுவாமியின் அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி மீண்டும் நந்தியின் கொம்புகள் வழியே சிவலிங்கத்தைத் தரிசித்து மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரையும் தரிசித்து, மீண்டும் அப்பிரதட்சணமாக வலம் வந்து மீண்டும் சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வலம் வந்த வழியே திரும்பி, மீண்டும் நந்திகேஸ்வரரின் கொம்புகள் வழியே இறைவனை வழிபட்டு, மீண்டும் சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று அவரை வழிபட வேண்டும். இவ்வாறு மும்முறை வலம் வந்து வழிபாடு செய்வதே பிரதோஷ கால பிரதட்சண முறையாகும்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் சிவனுக்கு உகந்த மாத சிவராத்திரி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சித்திரை 30 (13.5.2018) ஞாயிறு
    வைகாசி 29 (12.6.2018) செவ்வாய்
    ஆனி 27 (11.7.2018) புதன்
    ஆடி 24 (9.8.2018) வியாழன்
    ஆவணி 23 (8.9.2018) சனி
    புரட்டாசி 21 (7.10.2018) ஞாயிறு
    ஐப்பசி 19 (5.11.2018) திங்கள்
    கார்த்திகை 19 (5.11.2018) புதன்
    மார்கழி 20 (4.1.2019) வெள்ளி
    தை 19 (2.2.2019) சனி
    மாசி 20 (4.3.2019) திங்கள்
    பங்குனி 20 (3.4.2019) புதன்

    ×