search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் விரதம்"

    சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.
    சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ஆதரவுக் கரம் கூடுதலாக இருக்கும். செல்வ வளம் பெருகி வாழலாம். செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.

    பெண்களுக்கு ஒன்பது நாள் “நவராத்திரி”. ஆண்களுக்கு ஒரு நாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வந்தார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை ‘விஜயதசமி’ என்றும் கொண்டாடினர்.

    ஆண்கள் பொருள் தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம் தான் ஒதுக்க இயலும். எனவே வருடத்தில் ஒருநாள் சிவனை நினைத்து வழிபட்டு, வருடம் முழுவதும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பதால் ‘சிவராத்திரி’யைத் தேர்ந்தெடுத்தனர்.

    மாலை 6 மணிக்கு விநாயகப் பெருமானை வணங்கி, அதன்பிறகு சிவனை வணங்கத் தொடங்கி, இயன்ற அளவு ஒரே ஆலயத்தில் ஆறுகால பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று ஒவ்வொரு சிவாலயத்திலும் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வரலாம். அங்ஙனம் வழிபடச் செல்லும் பொழுது நந்தீஸ்வரரை வணங்கி உத்தரவு கேட்டு, பிறகு சிவனையும், உமையவளையும் வழிபட வேண்டும். தொடர்ந்து பரிவார தெய்வங்களை வழிபட்டு, இறுதியில் சண்டிகேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.

    சிவனை சிந்தையில் நிறுத்திக் கொண்டாட வேண்டிய நாளான ‘மகாசிவராத்திரி’ வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. அதற்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று நந்தியை வழிபட்டு வர வேண்டும்.

    உமாதேவி தன் திருக்கரங்களால், விளையாட்டாக சிவபெருமான் கண்களை மூடினார். இதனால் உலகமே இருள்மயமானது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்க சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாக கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் ஈசனை அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும், யோகங்கள் சேரும், செல்வ வளம் பெருகும், புகழ்பெறும் வாய்ப்பு உருவாகும். இன்னல்கள் விலகி இனிய பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக்கொள்ள இயலும்.

    சிவராத்திரியன்று விரதம் இருந்து மகாவிஷ்ணு சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கிறது. பிரம்மதேவன் சரஸ்வதியை அடைந்ததும் இந்த நாளில் தான் என்பார்கள். எனவே கல்வி விருத்தி, செல்வ விருத்தி பெற்று வெற்றிக் கொடி நாட்ட விரும்புபவர்கள், இந்த விரதத்தை மேற்கொண்டால் வெற்றி மீது வெற்றி காண இயலும்.
    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று விரதம் இருந்து பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
    சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம். திங்கட் கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். ‘சோம’ என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி ஈசனை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், அவனது நோயை நீக்கியதுடன், நவக்கிரகங் களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அந்த நாள் சோமவாரம் ஆகும்.

    சிவபெருமானுக்கு திங்கள் கிழமை மிகவும் விசேஷம். திங்கள் கிழமை வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் என்பது ஐதீகம்.

    இன்றைய பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது. சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார்; நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை சிக்கெனப் பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்!

    நம்பிக்கையோடு 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம்.

    அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் ஈசனை வணங்கினால், நம்முடைய தோஷங்கள் நீங்கும். சோதனைகள் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும்.

    இந்த சோமவார பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடுபொடியாக்குவார். நாம் தொட்டதெல்லாம் துலங்கும்படி வரம் அருளுவார். ஈசனின் பாதத்தை பற்றுவோம். வேண்டியன எல்லாம் பெறுவோம்! 
    சிவராத்திரி தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும் என்று பார்வதி தேவி பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    சிவராத்திரி வழிபாட்டை உருவாக்கிய பெருமை பார்வதி தேவியையே சேரும். ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களை மூடினார். உலகுக்கு ஒளி வழங்கும் சூரியனும், சந்திரனுமே, ஈசனின் இரண்டு கண்களாக உள்ளனர். எனவே ஈசனின் கண்கள் மூடப்பட்டதும், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. உலக உயிர்கள் தவித்தன.

    இதனால் பயந்து போன பார்வதிதேவி, தன்னுடைய பிழையை பொறுத்தருளும்படி சிவனை வேண்டினாள். அதோடு உலகம் மீண்டும் இயங்கவும், உயிர்கள் துன்பமின்றி வாழவும் அன்றைய இரவில் நான்கு ஜாமங்களிலும் கண் விழித்து சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டாள். வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சியளித்த ஈசன், தன் உடலில் பாதியை அவளுக்குத் தந்து உலகமும், உயிர்களும் இன்புற்று வாழ அருள்பாலித்தார்.

    தனக்கும் உலக உயிர்களுக்கும் அருள்பாலித்த ஈஸ்வரனை வணங்கிய பார்வதி, “உலகமும் உயிர்களும் மீண்டும் இயங்க காரணமான இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் மறவாமல் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அது உங்கள் திருநாமத்தினாலேயே விளங்க வேண்டும். அந்த தினத்தில் வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும், மறுமையில் சொர்க்கமும், இறுதியில் முக்தியும் அளிக்க வேண்டும்” என்று பரமனிடம் வேண்டினாள். அதுவே மகா சிவராத்திரி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் மாசி மகமான இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    19-2-2019 (இன்று) மாசி மகம்

    மாசி மாதத்தில் பவுர்ணமியோடு கூடிய மகம் நட்சத்திரம் வரும் தினத்தை ‘மாசி மகம்’ என்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இந்த புண்ணிய நாளில், விரதம் இருந்து புண்ணிய தீர்த்தங்களில் வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    முன்காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் பல கொடிய செயல்களைச் செய்து, மக்களை துன்புறுத்தி வந்தான். அவனைக் கொல்வதற்கான வழியை, அவனது குலகுரு அறிந்திருந்தார். அதை வருண பகவானிடம் சொல்வதற்காக அவர், இருள் சூழ்ந்த நேரத்தில் சென்றார். இருட்டில் குருவை பகைவன் என்று நினைத்த வருணன், அவர் மீது தனது பாசத்தை வீசினான். இதில் அந்த குரு இறந்தார்.

    அவன் செய்த பாவத்தினால் அங்கு ஒரு பெரிய ராட்சசன் தோன்றினான். அவன், வருணனை இரண்டு கால்கள் மற்றும் கைகள், கழுத்தோடு இணையும்படி கட்டி, கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல் பலகாலமாக கடலுக்குள்ளேயே கிடந்தான் வருணன். இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் பலரும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தனர். வருணனை விடுவிக்கும்படி வேண்டுதல் வைத்தனர். இதையடுத்து சிவபெருமான், வருணன் ஆழ்ந்து கிடந்த சமுத்திரத்தில் எழுந்தருளி, அவனது கட்டுகளை விடுவித்து அருளினார். இது நிகழ்ந்ததாக சொல்லப்படுவது சிதம்பரம் திருத்தலம் ஆகும்.

    துன்பத்தில் இருந்து மீண்ட வருணன், சிவபெருமானை வணங்கி “இறைவா! மாசி மகமாகிய இந்த தினத்தில், இத்தலத்தில் நீராடு பவர்களுடைய துன்பங்களை போக்கி அருள வேண்டும். அதுபோன்ற தருணங்களில் இறைவனாகிய நீங்கள், புண்ணிய நதிகளில் எழுந்தருளி மக்களை காத்தருள வேண்டும்” என்று வேண்டி வரம் பெற்றான்.

    இந்த கதையை வியாக்ரபாத முனிவர், இரணியவர்மன் என்ற மன்னனுக்கு கூறினார். அவன் மாசி மகத்தன்று, சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கொடியேற்றி வைத்தான். அப்போது தேவர்கள், முனிவர்கள் பலரும் அங்கு வந்து விழாவை கண்டுகளித்தனர். மேலும் “இறைவா! கனகசபைக்குத் தலைவரே. எங்களுக்கு அருள் செய்யுங்கள்” என்று வேண்டினர்.

    பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமான் சமுத்திரத்திற்கு எழுந்தருளும் வழியை அலங்காரம் செய்தனர். சிவபெருமான் கடற்கரைக்கு எழுந்தருளினார். இதனை வருணன் கண்டு, எதிர் கொண்டு ஈசனை வணங்கினான். சிவபெருமான் வருணனின் துன்பத்தை நீக்கிய துறையிலேயே நீராடி, அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்து கனக சபைக்குள் புகுந்தார்.

    சிதம்பரத்தில் உள்ள பத்து தீர்த்தங்களில் ‘பாசமறுத்த துறை’யும் ஒன்று. இது சிதம்பரத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாசி மக நாளில் அந்த தீர்த்தத்தில், தீர்த்த உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

    நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

    அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

    குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
    சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவனுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் தோறும் அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.

    இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

    ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை அடுத்த திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். 
    மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து சிவன் கோவில்களில் நந்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் துன்பம் விலகி நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

    இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

    பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

    நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?
    தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.
    (7-11-2018 புதன்கிழமை)

    தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம்.

    கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும், குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவ அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும்.  இன்று ஒரு கலசத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் (கயிற்றில்) அம்மனை ஆவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து, அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை, நிவேதனம் செய்து, பூஜை முடித்து பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை சுமங்கலிப் பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு 21 சுமங்கலிப் பெண்களுக்கு 21 வெத்தலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்கி அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவபார்வதி அருள் கிட்டும் என்கிறது ஸ்காந்த மகாபுராணம்.

    இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதை வருமாறு:-

    சிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்காதவர் பிருங்கி முனிவர். ஒருமுறை, ஈசனைத் தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் பிருங்கி முனிவர். அங்கு, சிவபெருமானும், பார்வதி தேவியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். ‘இப்போது வணங்கினால், பார்வதிதேவியையும் சேர்த்து வணங்க நேரிடுமே’ என்று எண்ணிய பிருங்கி முனிவர், சிவ பெருமானை மட்டுமே வணங்க தந்திரம் ஒன்று செய்தார்.

    தன்னை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு சிவபெருமானை மட்டும் வட்டமிட்டுப் பறந்து வணங்கித் திரும்பினார். இதைக்கண்ட பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். முனிவரின் உடலில் திகழும்... தனது சக்தியான ரத்தம், சதை ஆகியவற்றை வற்றச் செய்தாள். இதனால் நிற்க முடியாமல் தடுமாறிய பிருங்கி முனிவர் கீழே விழுந்தார்.

    தனது இந்த நிலைக்கான காரணத்தை அறிந்த முனிவர், “தங்களை மட்டுமே வணங்கும் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா?” என்று கண்ணீர் மல்க பரமேஸ்வரனிடம் முறையிட்டார். மனமிரங்கிய பரமேஸ்வரன், முனிவருக்கு ஊன்று கோல் அளித்து அருளி னார். அதன் உதவியுடன் எழுந்து நடக்கலானார் பிருங்கி முனிவர். ஆனால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது. பார்வதி தேவி வெகுண்டாள்!

    ‘இனி, சிவபெருமானை எவர் வந்து வணங்கினாலும் என்னையும் சேர்த்து வணங்கிச் செல்ல வேண்டும்!’ என்று எண்ணியவள், கவுதம முனிவரது ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், பிருங்கி முனிவரால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எடுத்துரைத்தாள். “இனி, இது போல் அவமானம் நேராமல் இருக்க, தாங்களே வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.

    இதைக் கேட்ட கவுதம முனிவர், “மகா சக்தியே... நாங்கள், இருபத்தோரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஒன்றை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் நிறைவுறும் போது, தங்களது விருப்பம் நிறைவேறும்!” என்று கூறியதுடன், அந்த விரதம் குறித்த நியதிகளையும் விளக்கினார்.

    அதன்படி, புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் துவங்கி இருபத்தோரு நாட்கள் விரதம் அனுஷ்டித்தாள். நிறைவு நாளன்று, அவள் முன் காட்சியளித்தார் சிவனார். அவரிடம் தனது விருப்பத்தைக் கூறினாள் பார்வதிதேவி. உடனே, “தேவி! இனி, என் மேனியில் இடபாகம் உனக்குச் சொந்தம். நம்மை எவராலும் பிரித்துப் பார்க்க இயலாது. என்னை வணங்குவோர் அனைவரும் உன்னையும் சேர்த்தே வணங்குவார்கள்” என்று அருளினார்.

    அதன்படி இறைவனின் இட பாகம் பெற்றாள் அம்பிகை. இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். கவுரியாகிய ஸ்ரீபார்வதிதேவி கடைப்பிடித்த இந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்று போற்றுவர்.

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திருநாள் தொடங்கி, தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து கவுரி தேவியையும், சிவபெருமானையும் பூஜித்து வழிபடும் பெண்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்வும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

    சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    7-11-2018 அன்று கேதார கவுரி விரதம்

    ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான். அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள். சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடி, பார்வதி - பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.

    கோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.

    சிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி! பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.

    இதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே! நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உமக்கு?’ எனக் கோபமாகச் சொன்னாள்.

    அதற்கு முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

    பார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.

    அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.

    ‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.

    பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.

    முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.

    ‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப் படுவதாகும்.

    விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.

    அதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.

    கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.

    கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
    கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.
    பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர். ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள். அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

    இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள். வனம் ஒன்றில் கெளதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள். அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கெளதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார். அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

    அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.

    இந்த விரதத்தை எப்போது கடைப்பிடிப்பது?

    இதுகுறித்து கெளதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ‘‘புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும். சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!” என்றார்.

    வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.
    ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை. இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால் மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை

    சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. சிவனோடு இணைந்து உமாமகேஸ்வரியின் வடிவமும் இணைவது சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் அற்புத வடிவம். இவர்களை ஒரு சேரத் தியானித்து ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவதே உமாமகேஸ்வர விரதம்.

    இந்த விரதத்தைத் தொடங்கினால் தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.

    பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இன்று உமா மகேஸ்வரரை வணங்கி விரதம் இருந்து எல்லா நலமும் வளமும் பெற பிரார்த்திக்கிறோம்.
    பிரதோஷ விரதத்தின் சிறப்பினையும், அதனை யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

    தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

    மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் ஏதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

    சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

    பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும். 
    ×