என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kethara gowri viratham
நீங்கள் தேடியது "kethara gowri viratham"
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.
நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.
அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.
குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.
அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.
குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம்.
(7-11-2018 புதன்கிழமை)
தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம்.
கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும், குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவ அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இன்று ஒரு கலசத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் (கயிற்றில்) அம்மனை ஆவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து, அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை, நிவேதனம் செய்து, பூஜை முடித்து பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை சுமங்கலிப் பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு 21 சுமங்கலிப் பெண்களுக்கு 21 வெத்தலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்கி அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவபார்வதி அருள் கிட்டும் என்கிறது ஸ்காந்த மகாபுராணம்.
இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதை வருமாறு:-
சிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்காதவர் பிருங்கி முனிவர். ஒருமுறை, ஈசனைத் தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் பிருங்கி முனிவர். அங்கு, சிவபெருமானும், பார்வதி தேவியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். ‘இப்போது வணங்கினால், பார்வதிதேவியையும் சேர்த்து வணங்க நேரிடுமே’ என்று எண்ணிய பிருங்கி முனிவர், சிவ பெருமானை மட்டுமே வணங்க தந்திரம் ஒன்று செய்தார்.
தன்னை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு சிவபெருமானை மட்டும் வட்டமிட்டுப் பறந்து வணங்கித் திரும்பினார். இதைக்கண்ட பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். முனிவரின் உடலில் திகழும்... தனது சக்தியான ரத்தம், சதை ஆகியவற்றை வற்றச் செய்தாள். இதனால் நிற்க முடியாமல் தடுமாறிய பிருங்கி முனிவர் கீழே விழுந்தார்.
தனது இந்த நிலைக்கான காரணத்தை அறிந்த முனிவர், “தங்களை மட்டுமே வணங்கும் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா?” என்று கண்ணீர் மல்க பரமேஸ்வரனிடம் முறையிட்டார். மனமிரங்கிய பரமேஸ்வரன், முனிவருக்கு ஊன்று கோல் அளித்து அருளி னார். அதன் உதவியுடன் எழுந்து நடக்கலானார் பிருங்கி முனிவர். ஆனால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது. பார்வதி தேவி வெகுண்டாள்!
‘இனி, சிவபெருமானை எவர் வந்து வணங்கினாலும் என்னையும் சேர்த்து வணங்கிச் செல்ல வேண்டும்!’ என்று எண்ணியவள், கவுதம முனிவரது ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், பிருங்கி முனிவரால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எடுத்துரைத்தாள். “இனி, இது போல் அவமானம் நேராமல் இருக்க, தாங்களே வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதைக் கேட்ட கவுதம முனிவர், “மகா சக்தியே... நாங்கள், இருபத்தோரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஒன்றை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் நிறைவுறும் போது, தங்களது விருப்பம் நிறைவேறும்!” என்று கூறியதுடன், அந்த விரதம் குறித்த நியதிகளையும் விளக்கினார்.
அதன்படி, புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் துவங்கி இருபத்தோரு நாட்கள் விரதம் அனுஷ்டித்தாள். நிறைவு நாளன்று, அவள் முன் காட்சியளித்தார் சிவனார். அவரிடம் தனது விருப்பத்தைக் கூறினாள் பார்வதிதேவி. உடனே, “தேவி! இனி, என் மேனியில் இடபாகம் உனக்குச் சொந்தம். நம்மை எவராலும் பிரித்துப் பார்க்க இயலாது. என்னை வணங்குவோர் அனைவரும் உன்னையும் சேர்த்தே வணங்குவார்கள்” என்று அருளினார்.
அதன்படி இறைவனின் இட பாகம் பெற்றாள் அம்பிகை. இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். கவுரியாகிய ஸ்ரீபார்வதிதேவி கடைப்பிடித்த இந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்று போற்றுவர்.
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திருநாள் தொடங்கி, தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து கவுரி தேவியையும், சிவபெருமானையும் பூஜித்து வழிபடும் பெண்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்வும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான தீபாவளி அமாவாசை அன்றாவது இதை அனுஷ்டிக்கலாம்.
கவுதம மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை செய்யும் பெண்மணிக்கும் அவரது கணவர், குழந்தைகளுக்கும் ஆயுள் அதிகரிக்கும். தீராத நோயும் விலகும், குடும்பத்தில் மங்களம் நிலவும், சிவ அபசாரங்கள் விலகி நல்ல எண்ணம் ஏற்படும். இன்று ஒரு கலசத்துடன் 21 இழை, 21 முடியுள்ள மஞ்சள் சரட்டில் (கயிற்றில்) அம்மனை ஆவாகனம் செய்து 16 உபசார பூஜை செய்து, அஷ்டோத்தரத்தால் அர்ச்சித்து, 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை, நிவேதனம் செய்து, பூஜை முடித்து பூஜை செய்த 21 முடிச்சுள்ள சரட்டை சுமங்கலிப் பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு 21 சுமங்கலிப் பெண்களுக்கு 21 வெத்தலை, 21 பாக்கு, 21 மஞ்சள் கிழங்குடன் தாம்பூலம் தந்து வணங்கி அவர்கள் ஆசியைப் பெற வேண்டும். இதனால் சிவபார்வதி அருள் கிட்டும் என்கிறது ஸ்காந்த மகாபுராணம்.
இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதை வருமாறு:-
சிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் வணங்காதவர் பிருங்கி முனிவர். ஒருமுறை, ஈசனைத் தரிசிக்க கயிலாய மலைக்குச் சென்றார் பிருங்கி முனிவர். அங்கு, சிவபெருமானும், பார்வதி தேவியும் தம்பதி சமேதராக வீற்றிருந்தனர். ‘இப்போது வணங்கினால், பார்வதிதேவியையும் சேர்த்து வணங்க நேரிடுமே’ என்று எண்ணிய பிருங்கி முனிவர், சிவ பெருமானை மட்டுமே வணங்க தந்திரம் ஒன்று செய்தார்.
தன்னை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு சிவபெருமானை மட்டும் வட்டமிட்டுப் பறந்து வணங்கித் திரும்பினார். இதைக்கண்ட பார்வதிதேவி கடும் கோபம் கொண்டாள். முனிவரின் உடலில் திகழும்... தனது சக்தியான ரத்தம், சதை ஆகியவற்றை வற்றச் செய்தாள். இதனால் நிற்க முடியாமல் தடுமாறிய பிருங்கி முனிவர் கீழே விழுந்தார்.
தனது இந்த நிலைக்கான காரணத்தை அறிந்த முனிவர், “தங்களை மட்டுமே வணங்கும் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா?” என்று கண்ணீர் மல்க பரமேஸ்வரனிடம் முறையிட்டார். மனமிரங்கிய பரமேஸ்வரன், முனிவருக்கு ஊன்று கோல் அளித்து அருளி னார். அதன் உதவியுடன் எழுந்து நடக்கலானார் பிருங்கி முனிவர். ஆனால் பிரச்சினை வேறு வடிவம் எடுத்தது. பார்வதி தேவி வெகுண்டாள்!
‘இனி, சிவபெருமானை எவர் வந்து வணங்கினாலும் என்னையும் சேர்த்து வணங்கிச் செல்ல வேண்டும்!’ என்று எண்ணியவள், கவுதம முனிவரது ஆசிரமத்தை அடைந்தாள். அவரிடம், பிருங்கி முனிவரால் தனக்கு நேர்ந்த அவமானத்தை எடுத்துரைத்தாள். “இனி, இது போல் அவமானம் நேராமல் இருக்க, தாங்களே வழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.
இதைக் கேட்ட கவுதம முனிவர், “மகா சக்தியே... நாங்கள், இருபத்தோரு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஒன்றை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் நிறைவுறும் போது, தங்களது விருப்பம் நிறைவேறும்!” என்று கூறியதுடன், அந்த விரதம் குறித்த நியதிகளையும் விளக்கினார்.
அதன்படி, புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் துவங்கி இருபத்தோரு நாட்கள் விரதம் அனுஷ்டித்தாள். நிறைவு நாளன்று, அவள் முன் காட்சியளித்தார் சிவனார். அவரிடம் தனது விருப்பத்தைக் கூறினாள் பார்வதிதேவி. உடனே, “தேவி! இனி, என் மேனியில் இடபாகம் உனக்குச் சொந்தம். நம்மை எவராலும் பிரித்துப் பார்க்க இயலாது. என்னை வணங்குவோர் அனைவரும் உன்னையும் சேர்த்தே வணங்குவார்கள்” என்று அருளினார்.
அதன்படி இறைவனின் இட பாகம் பெற்றாள் அம்பிகை. இறைவன் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். கவுரியாகிய ஸ்ரீபார்வதிதேவி கடைப்பிடித்த இந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்று போற்றுவர்.
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திருநாள் தொடங்கி, தொடர்ந்து 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து கவுரி தேவியையும், சிவபெருமானையும் பூஜித்து வழிபடும் பெண்களுக்கு இனிமையான தாம்பத்திய வாழ்வும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
7-11-2018 அன்று கேதார கவுரி விரதம்
ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான். அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள். சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடி, பார்வதி - பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.
கோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.
சிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி! பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.
இதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே! நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உமக்கு?’ எனக் கோபமாகச் சொன்னாள்.
அதற்கு முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.
பார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.
அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.
‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.
பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.
முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.
‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப் படுவதாகும்.
விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.
அதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.
கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.
கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
ஆணுக்குப் பெண் சரிநிகர் என்ற சமத்துவத்தை, முதன் முதலில் செயல்படுத்தியவர் சிவபெருமான். அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதிதேவிக்குத் தந்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற வடிவம் கொண்டார் என்கிறது புராணங்கள். சிவபெருமானிடம் இடப் பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதாரீஸ்வரர் விரதம்’ என்றும், பார்வதிக்கு கவுரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் ‘கேதார கவுரி விரதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருக்கும் வேளையில், சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடி, பார்வதி - பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர் மட்டும், பார்வதியைத் தவிர்த்து, சிவபெருமானை மட்டுமே தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இது பலமுறை நிகழ்ந்தது. ஒரு நாள் அம்பிகை, சிவபெருமானை நெருங்கி அமர்ந்து கொண்டார். இந்த முறை பிருங்கி முனிவர், வண்டு உருவம் எடுத்து சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து, ஈசனை மட்டுமே வழிபாடு செய்து சென்று விட்டார்.
கோபம் கொண்ட பார்வதி தேவி, இதற்கான காரணத்தை சிவபெருமானிடம் கேட்டார்.
சிவபெருமான் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ‘தேவி! பிருங்கி முனிவர் பாக்கியத்தை விரும்புகிறவன் அல்ல. அவன் மோட்சத்தை அடைய நினைப் பவன். மவுனநிலை வகித்த பெரும் தவமுடையவன்; காரணப் பொருள் ஒன்றே; மற்றொன்று இல்லை எனக் கருதுபவன். ஆகையால் தான் என்னை மட்டும் வழிபட்டுச் சென்றான்’ என்று கூறினார்.
இதைக் கேட்ட பார்வதி தேவி, பிருங்கி முனிவரிடம், ‘பிருங்கியே! நான் தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் கூட இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே! தெரியுமா உமக்கு?’ எனக் கோபமாகச் சொன்னாள்.
அதற்கு முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுக்கோலை கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.
பார்வதிதேவி கயிலாயத்தை விட்டு பூலோகத்தை அடைந்து கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடிப்போய் இருந்த, அந்த ஆசிரமம் இருந்த இடம் நந்தவனமானது. எங்கும் பூக்களின் நறுமணம் வீசியது.
அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர், உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்துகொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமா தேவியாரைக் கண்டார்.
‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கியவர், அன்னை பார்வதி தேவி வந்ததன் நோக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டார்.
பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் இணையும் பொருட்டு, நான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதம் ஒன்றையும், அதனை அனுஷ்டிக்கும் முறைையயும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.
முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப்பெயர்’ எனக் கூறி, அதனை அனுஷ்டிக்கும் முறையையும் கூறினார்.
‘இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படும். அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப் படுவதாகும்.
விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல், ஒவ்வொரு பொழுதும் சூரிய அஸ்த மனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து, முறுக்கு, அதிரசம், வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம் உருண்டை, மாஇலை, அரளி மொட்டு, வாழைப்பழம் போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதாரநாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று விரத முறையை கவுதமர் கூறினார்.
அதன்படியே பார்வதி தேவி விரதம் இருந்து வந்தாள். முடிவில் சிவபெருமான் தோன்றி, அன்னைக்கு தன்னுடைய உடலில் சரிபாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் எழுந்தருளினார்.
கேதாரீஸ்வரரைக் குறித்து உமாதேவியாராகிய கவுரி அனுஷ்டித்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ என்று அழைக்கப்படுகிறது.
கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும். இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் ‘கவுரி’ என அழைக்கப்பட்டாள். அருணகிரிநாதர் கவுரிதேவியை, ‘உலகு தரு கவுரி’ எனப் போற்றுகிறார். கவுரிதேவியை வழிபடுவது, அனைத்து தேவ-தேவியரையும் வழிபடுவதற்குச் சமம். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள். ஞானிகள் 108 வகை கவுரி தேவி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட வகை செய்துள்ளனர். அதிலும் மிக முக்கியமானது 16 வகையான கவுரி வழிபாடு. இந்த வழிபாட்டால் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X