search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவசக்தி பள்ளி"

    • தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்து மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.
    • நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளி யில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

    மாணவி வைஷ்ணவி வரவேற்றார். தீபாவளி பண்டிகை கொண்டாடப் படும் விதம் குறித்தும், பட்டாசு வெடிக்கும் விதிமுறை குறித்தும் மாணவி ஜெய் ஸ்ரீ விளக்கி கூறினார்.

    தீபாவளி உருவான வரலாறு குறித்து 10-ம் வகுப்பு மாணவி பொன் கீர்த்தனா மாணவர்களுக்கு எடுத்து கூறினார். மாணவி சுதர்ஷினி தீபாவளி குறித்து ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். மாணவி ஸ்ரீ பவித்தா நன்றி கூறினார். மாணவ - மாணவிகள் தாங்கள் கொண்டு வந்த இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    ஆசிரியர்களுக்கு இனிப்பு மற்றும் போனஸ் பள்ளி நிர்வாகம் சார்பில் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை நித்தியா தினகரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர்.
    • விளையாட்டுப் போட்டிகளில் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானுார் அருகே உள்ள பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி முதல்வர் நித்யா தினகரன் தலைமை தாங்கினார். மாணவி சுதர்சினி வரவேற்று பேசினார். மாணவி வைஷ்ணவி ஆசிரியர் தின விழா கொண்டாடுவதன் நோக்கத்தை எடுத்து கூறினார். 10-ம் வகுப்பு மாணவிகள் பள்ளி ஆசிரியைகள் எவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நாடகம் மூலம் எடுத்து கூறினர்.

    தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர்- ராதை வேடம் அணிந்து நடனமாடினர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னதாக திசையன்விளை வி.எஸ்.ஆர். கல்விக்குழுமம் நடத்திய 4 மாவட்டங்களுக்கு இடையேயான கபாடி போட்டியில் பள்ளி மாணவர்கள் 0-14 மற்றும் யு-19 பிரிவில் விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றினர். மேலும் கோவில்பட்டியில் வித்யாபாரதி நடத்திய பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் பெற்றனர்.

    சுரண்டை எஸ்.ஆர். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு கலை-விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் திறம்பட பங்கேற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விழாவின்போது பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களால் ஆசிரியைகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களில் ஆசிரியைகள் உற்சாக மாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவி ஆஸ்மி நன்றி கூறினார்.

    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர்-பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 11-வது பெற்றோர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவி ஸ்ரீ நிவிதா வரவேற்று பேசினார்.

    மாணவி ஜெய் வர்ஷிதா வரவேற்று பேசினார். மாணவர்களின் கல்வி, கலை, விளையாட்டு தனித் திறமை போன்ற அனைத்து பரிணாம வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்க வேண்டி யது நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாண வர்கள்.

    இதனை உறுதி செய்யும் விதமாக பள்ளியின் நிர்வாகியும் பள்ளியின் முதல்வருமான நித்யா தினகரன், ஆசிரியர்களின் சார்பாக ராஜம்மாள், பெற்றோர்களின் சார்பாக விழாவிற்கு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவியும், பள்ளி மாணவரின் பெற்றோருமாகிய பொன் சீலா பரமசிவன் மாணவர் களின் சார்பாக குழந்தைகளுடன் சேர்ந்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

    மாணவிகள் தனிஷா, விஜய ரக்ஷா மற்றும் ஆஸ்மி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தி னர் பொன்சீலா பரமசிவன் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கி பள்ளி வளாக சாலை மேம்பாட்டிற்காக ரூ. 26 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

    சிவசக்தி வித்யாலயா பள்ளியில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பு களில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளின் பரதம், நடனம், ஸ்கேட்டிங் மற்றும் கராத்தே போன்ற துறைகளில் கலை வெளிப் பாடுகள் அரங்கேற்றப் பட்டன.

    தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் பள்ளிக்குள் பள்ளி களுக்கு இடையில் நடை பெற்ற பல்வேறு போட்டி களில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்கள், கேடயங்களும் வழங் கப்பட்டன.

    மேலும் பள்ளியில் அறிவுறுத்தப்பட்ட உணவு பட்டியலை இக்கல்வி ஆண்டு முழுவதிலும் தவறாமல் கடைப்பிடித்த பெற்றோர்களை ஊக்கு விக்கும் விதமாக அவரவர்களின் குழந்தைகளின் கையாலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

    மழலை பருவத்தில் இருந்து பொது அறிவில் சிறப்பு பயிற்சி கொடுப்பதே பள்ளியின் சிறப்பு. அதனை நிரூபிக்கும் விதமாக பள்ளி ப்ரீ கே.ஜி. குழந்தைகள் தமிழ்நாட்டின் சின்னங்கள் என்ற தலைப்பிலும்,

    எல்.கே.ஜி. குழந்தைகள் தேச தலைவர்களின் படங்களை அடையாளம் காணுதல் என்ற தலைப்பிலும்,

    யு.கே.ஜி. குழந்தைகள் சாலை விதிக்கான குறியீடு களை அடையாளம் காணு தல் ஆகியவற்றிற்கு பார்வை யாளர்களின் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

    மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் ஆகியோர்களின் பங்களிப்பை அழகாய் வெளிப்படுத்தும் விதமாக மாணவர்கள் அதற்கேற்ற பாடல்களுடன் தங்களின் அன்பை வெளிப்படுத்தி நடனம் ஆடிய விதம் அனை வரையும் நெகிழ வைத்தது.

    மாணவி ரச்சிதா மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மேலும் வகுப்பு வாரியாக உள்ள குழந்தை களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களால் மகிழ்ச்சி யான விளையாட்டுகள் நடத்தப்பட்டன. மாண வர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்களுக்கு சிறப்பு விருந்தினரால் பரிசு கள் வழங்கப்பட்டன.

    விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மாணவ- மாணவிகளே தொகுத்து வழங்கி நடத்தினர். முடிவில் மாணவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    ×