search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகிரி அருகே"

    • டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது 67). இவருடைய மகன் லோகநாதன் (34). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற லோகநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் லோகநாதன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அப்பகு தியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெரு ந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை காந்தி சிவகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×