என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager died suddenly"

    • தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் பிஜிலிபாளையத்தை சேர்ந்தவர் பொம்மன். இவரது மகன் மாதேஷ் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ஜோதியின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்க்க மாதேஷ் குடும்பத்தினருடன் கடம்பூர் காடகநல்லி சென்று தங்கியிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் மாதேஷை பசுவனபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது 67). இவருடைய மகன் லோகநாதன் (34). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற லோகநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் லோகநாதன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அப்பகு தியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெரு ந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை காந்தி சிவகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×