என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் அருகே வாலிபர் திடீர் சாவு
    X

    பர்கூர் அருகே வாலிபர் திடீர் சாவு

    • தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் பிஜிலிபாளையத்தை சேர்ந்தவர் பொம்மன். இவரது மகன் மாதேஷ் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ஜோதியின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்க்க மாதேஷ் குடும்பத்தினருடன் கடம்பூர் காடகநல்லி சென்று தங்கியிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் மாதேஷை பசுவனபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×