search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறையில் அடைத்தனர்"

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • 30 பாட்டில்கள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்கப்படுவதாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் துரைபெரும்பாக்கம், ஈராளஞ்சேரி பகுதிகளில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது துரைபெரும் பாக்கம் கிராமத்தில் போலீசாரை கண்டவுடன் ஓட முயன்ற வாலிபரை பிடித்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் துரைபெரும்பாக்கம் கிராமம், கிறிஸ்டியன் தெருவை சேர்ந்த மதனகாமராஜ் (29) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பைக் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் மங்கம்மா பேட்டை பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர்.

    அப் போது ஒரே மோட்டார் சைக் கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினர். சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருந் தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 22), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த விஜய குமார் (21), மங்கமாபேட்டை பகுதியை சேர்ந்த மணிகண் டன் (18) என்பது தெரியவந் தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற் றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×