search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர் சீர்திருத்த பள்ளி"

    • சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவானவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    சீர்திருத்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்கள் 9 ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தரப்படுகிறது. தற்போது வெளிவந்த பிளஸ்-2 தேர்வு முடிவில் 4 பேர் வெற்றி பெற்று உள்ளனர். பிளஸ்-1 தேர்வை 3 பேரும், 10-ம்வகுப்பு தேர்வை 14 பேரும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவ சிகிச்சை பிரிவை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த், சுகாதார மேற்பார்வையாளர் வித்யானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.
    • சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 32 சிறுவர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயதான திருநெல்வேலி, கீழகளக்காடு பகுதியை சேர்ந்த சிறுவன் மற்றும் விருத்தாசலம் அருகே உள்ள புதுகோரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் நேற்று மாலை திடீரென அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்கள் சீர்திருத்தப்பள்ளி அருகே உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    தப்பி ஓடிய சிறுவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
    • செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 30-ந் தேதி 17 வயது கொண்ட சிறுவனை திருட்டு வழக்கில் கைது செய்தனர். 31-ந் தேதி அவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

    அன்று மாலை சிறுவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்தான்.

    இதுதொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செங்கல்பட்டு, முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சிறுவனின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் சிறுவன் கொலை தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன், துணை சூப்பிரண்டு நித்யானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய 6 பேரை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×