search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த, பள்ளியில் பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி
    X

    செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த, பள்ளியில் பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

    • சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு குறைவானவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    சீர்திருத்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்கள் 9 ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தரப்படுகிறது. தற்போது வெளிவந்த பிளஸ்-2 தேர்வு முடிவில் 4 பேர் வெற்றி பெற்று உள்ளனர். பிளஸ்-1 தேர்வை 3 பேரும், 10-ம்வகுப்பு தேர்வை 14 பேரும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவ சிகிச்சை பிரிவை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத் தலைவர் லோகநாதன், நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவஅலுவலர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், ஆனந்த், சுகாதார மேற்பார்வையாளர் வித்யானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×