என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமியிடம் உல்லாசம்"
ஈரோடு:
ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த பெண் கர்ப்பம் தரித்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் ஈரோடு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து மகளிர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போத அந்த சிறுமி கூறியதாவது:-
சிவகிரி பகுதியை சேர்ந்த வாழை தோட்டம் கார வலசு ஜே.ஜே. நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் என்னிடம் பழகி ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பமாகி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் சண்முகத்தை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்