search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி பாலியல் தொந்தரவு"

    • திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், (36) என்பவர் கார் ஓட்டி வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரில், ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் உறவினர் திருமணம் நடக்கிறது. இதற்காக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 36 என்பவர் கார் ஓட்டி வந்தார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்த, ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார்.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    ×