search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி தற்கொலை"

    • ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரியா (17). இவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கவுதம் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து காதலித்து வந்த இருவரும் கடந்த 1.1.2023 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் நேதாஜி நகரிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஹரிபிரியா நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிச்சிப்பாளையம் போலீசார் ஹரிபிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×