search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை சிக்கியது"

    • சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.

    இதையொட்டி சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    சிறுத்தையை பிடிக்க கூண்டுகளுடன் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    இதையடுத்து கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.
    • சிறுத்தை குழந்தையை கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது. இதனையடுத்து நடைபாதை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

    வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆவேசத்துடன் தனது கால்களால் கூண்டை தாக்கியது. இதில் சிறுத்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் வன உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறுத்தை குழந்தையை கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூண்டில் சிறுத்தை சிக்கிய அன்றே லட்சுமி நரசிம்மர் சாமி கோவில், காளி கோபுரம் பகுதிகளில் மற்றொரு சிறுத்தை சுற்றி திரிந்தது.

    நடைபாதை அருகே சுற்றி திரிந்த சிறுத்தையை பிடிக்க மொகாலி மெட்டு, லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் மற்றும் 35-வது வளைவு ஆகிய இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

    லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    கடந்த 50 நாட்களில் நடைபாதையில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கி உள்ளன.

    நடைபாதை அருகே அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்களின் வருகை பாதியாக குறைந்து உள்ளது.

    இதற்கு முன்பு தினமும் நடைபாதையில் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வந்தனர். நடைபாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரமாக குறைந்து உள்ளது.

    திருப்பதியில் நேற்று 75,776 பேர் தரிசனம் செய்தனர். 22,700 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×