search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு முகாம் தொடங்கியது"

    • ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது.
    • இதில் விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் திட்டங்களில் முதியோர் ஓய்வூதிய பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை தராத இயலாத குடும்பத் தலைவிகள் மேற்கண்ட இந்த 3 நாட்களில் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப் பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

    இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் பல்வேறு காரணங்களுக்காக விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

    ×