search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு அலங்காரங்கள்"

    • ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 10-ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன், பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா காட்சி செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பச்சைகாளி, சிவன், காத்தவராயன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த நடனம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×