search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிந்தனை அதிகரித்தல்"

    • உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
    • பெண்கள் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "DEPRESSION" நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உணர்வு, சிந்தனை மற்றும் செயலை பாதிக்கின்றது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் மற்றும் வீட்டில் அல்லது வேலையில் சரியாகச் செயல்படுவதற்கான திறனை உங்களில் இருந்து தடுக்கும்.

    முதல்படி

    அதிலும் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் இதில் பாதிக்கப்படுகின்றார்கள். இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெண்கள் வாழ்நாளில் பெரும் மனச்சோர்வை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பொதுவான மனநல கோளாறு. இந்த மனநல கோளாறு தற்கொலைக்கு வழிவகுக்கும். இது பொதுவாக உங்களின் வேலை, தூக்கம், படிப்பு மற்றும் சாப்பிடும் திறனில் தலையிடுகிறது. இந்த அறிகுறிகள் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கும்.

    இரண்டாம் படி

    இது டிஸ்டிமியா என்றும் அழைக்கப்படுகிறது. அறிகுறிகள் கடுமையானவை அல்ல மற்றும் நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும்.

     அறிகுறிகள்

    உதவியற்றதாக உணர்தல்

    ஆர்வமின்மை

    அதிக தூக்கமின்மை

    எரிச்சல்

    எடை மாற்றங்கள்

    ஆற்றல் இழப்பு

    பொறுப்பற்ற செயல்கள்

    தலைவலி, முதுகுவலி, வயிற்று வலி

    சுய வெறுப்பு

    அமைதியின்மை

    குறைவான சிந்தனை

    அதிகம் பேசுதல்

    ஆளுமை மாற்றங்கள்

    நினைவக சிரமங்கள்

    உடல் வலி

    சோர்வு

    பசியிழப்பு

    உடலுறவில் ஆர்வம் இழப்பு

    இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டும் தான். ஆனால் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கு என்று செல்லகூடாது. எப்போது செல்ல வேண்டும் என்று முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    மனஅழுத்தம் அதிகரித்து உங்களுக்கு தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டாலே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். வைத்தியசாலை செல்வதற்கு மனம் இல்லை என்றால், உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பேசவும். இவ்வாறு செய்தாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×