search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயக்கழிவு தண்ணீா்"

    • சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

    திருப்பூர்

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.

    இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×