search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமளாபுரம் பேரூராட்சி"

    • ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் 142 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் , சாமளாபுரம் பேரூராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 140-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்.

    பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் 142 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் , சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் நில வருவாய் அதிகாரி, மற்றும் தி.மு.க. கட்சியின் சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.அன்பரசு,திமுக கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழக செயலாளர் பி.வேலுச்சாமி,சாமளாபுரம் பேரூர்கழக துணைச்செயலாளர்கள் எஸ்.பி.தியாகராஜன்,வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் தங்கராசு,ரங்கசாமி ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் தயாளன் ,வினோஜ்குமார், கிருஷ்ணவேணி, மகாலட்சுமி பாலச்சந்தர், மைதிலிபிரபு, துளசிமணிஆறுமுகம், ஒன்றிய பிதிதிநிதிகள் எழில்நிதி, சண்முகம், வார்டு செயலாளர் பழனிச்சாமி ,இச்சிப்பட்டி சிவக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதார் கார்டில் ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டன.
    • புதிதாக ஆதார் கார்டு எடுக்கப்பட்டன.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம், புதிதாக ஆதார் கார்டு எடுத்தல் ஆகியவை செய்யப்பட்டன.

    சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, வேலுச்சாமி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, தமாளன்வினோஜ்குமார், பிரியா, பெரியசாமி,துளசிமணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×