search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாக்ஷி"

    • கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்

    ரஜினி நடித்த காலா, அரண்மனை-3, நான் கடவுள் இல்லை, திருட்டு வி.சி.டி. உள்பட பல்வேறு தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். தற்போது மலையாளத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தற்காப்பு கலை பயிற்சி, களறி பயிற்சிகளை பயின்று வந்தார்.

    மேலும் கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




    இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மருமகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் இவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன.

    மேலும் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது.தமிழில் வித்தியாசமான வேடங்கள் மூலம் கதாநாயகியாக  அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என அசத்தி வருகிறார்.




    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் சாக்ஷி நடிக்க இருக்கிறார்.




    மேலும் சாக்ஷிக்கு தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி 75-வது குடியரசு தினத்தை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை எம்.எஸ். டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் கொடி கம்பத்தில் உயரமாக பறக்கும் தேசிய கொடியை எம்.எஸ். டோனி பார்த்து கொண்டே நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

     


    விரைவில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்க இருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஐ.பி.எல்.-இல் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வகையில், இது தொடர்பான கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், இது அவரின் கடைசி தொடராக இருக்குமா என்பதை எம்.எஸ். டோனி தான் முடிவு செய்வார் என தெரிவித்து இருக்கிறார்.



    • 13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை (தாய்லாந்து) தோற்கடித்தார்.

    புதுடெல்லி:

    13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 52 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்ஷி, கஜகஸ்தானின் ஜாஜிரா ரக்பாயேவாவை எதிர்கொண்டார்.

    இதில் ஆக்ரோஷமாக எதிராளிக்கு குத்துகளை விட்டு ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி 5-0 என்ற கணக்கில் ஜாஜிராவை துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    75 கிலோ எடைப்பிரிவின் 2-வது சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங்க் ஜூடாமஸ்சை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

    54 கிலோ எடைப்பிரிவின் 3-வது சுற்று பந்தயத்தில் இந்திய வீராங்கனை பிரீத்தி 3-4 என்ற கணக்கில் மெக்சிகோவின் வனெசா ஆர்டிஸ்சிடம் தோற்று வெளியேறினார்.

    ×