என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாகச பயிற்சி"
- நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.
- பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூர்:
மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு சாகசப் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டம், நாா்கண்டா என்ற இடத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.
இதில், பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மலையேறுதல், ஆற்றைக் கடந்து செல்லுதல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதில், பங்கேற்பதற்காக பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி வனபாா்வதி (விலங்கியல் துறை மூன்றாமாண்டு) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்திலிருந்து இவா் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டி வழியனுப்பி வைத்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்