search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சருவ"

    • மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
    • இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.

    மேய்ச்சல் நிலம்

    இந்த மலையை சுற்றி அணியாபுரம், தோளூர் எம்.ராசாம்பாளையம், மணியாரம்புதூர், கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த சருவ மலையில் ஏராளமான பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இந்த மலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள், தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த சருவ மலையை பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை தினசரி ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர்.

    தீப்பிடித்தது

    இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் இந்த தீ மளமளவென எரிந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சருவ மலையில் தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு விரைந்தனர். இந்த மலையில் எந்த பகுதியிலும் சாலை வசதி இல்லாததால், தீயணைப்பு வீரர்களால் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.

    பலவகை மரங்கள் எரிந்து நாசம்

    இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதியில் ஏறி, அங்குள்ள செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். இந்த தீயால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறையினரும், இரவு முழுவதும் போராடி சுமார் 1.30 மணியளவில், தீயை முழுவதுமாக அனைத்து கட்டுப்படுத்தினர்.

    இருப்பினும் தீயில் சருவ மலையில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின. இதுபோன்று சருவமலையில் அடிக்கடி தீ ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    ×