search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire on the mountain"

    • மரங்கள் எரிந்து நாசம்
    • வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையடிவார பகுதி களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, புகை பிடித்து தீயை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் பெரிய அளவில் தீப்பற்றி எரிகிறது. கடந்த மாதத்தில் ஏலகிரி மலையில் 5 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று மாலை காட்டுக்கு தீ வைத்து சென்றுள்ளனர்.இதில் மலையின் உச்சி பகுதிவரை தீ பரவியது. 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், வன விலங்குகள் தீயில் பாதிக்கப்பட்டன.

    மேலும் ஊசி நாட்டான் வட்டம் சந்தைக்கோடியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளின் மிகவும் மேற்கூரையில் சாம்பல் விழுகிறது. இதனால் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடும் மர்ம கும்பலை வனத்துறையினர் கண்காணித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.
    • இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்துக்கும், கால்நடை மருத்துவ கல்லூரிக்கும் இடையே சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திலும், 2 கிலோ மீட்டர் அகலத்திலும் சருவ மலை உள்ளது.

    மேய்ச்சல் நிலம்

    இந்த மலையை சுற்றி அணியாபுரம், தோளூர் எம்.ராசாம்பாளையம், மணியாரம்புதூர், கணவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த சருவ மலையில் ஏராளமான பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் உள்ளன. இந்த மலையை சுற்றி வசிக்கும் கிராம மக்கள், தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக இந்த சருவ மலையை பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகளை தினசரி ஓட்டிச் சென்று மேய்த்து வருகின்றனர்.

    தீப்பிடித்தது

    இந்நிலையில் சருவ மலையில் நேற்று மாலை அணியாபுரம் கொங்குளத்தூர், மாரியம்மன் கோவில் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்று வேகமாக வீசியதால் இந்த தீ மளமளவென எரிந்து சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் சருவ மலையில் உள்ள ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையிலான வீரர்கள் சருவ மலையில் தீ எரிந்து கொண்டிருக்கும் பகுதிக்கு விரைந்தனர். இந்த மலையில் எந்த பகுதியிலும் சாலை வசதி இல்லாததால், தீயணைப்பு வீரர்களால் தீ எரிந்து கொண்டிருந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை.

    பலவகை மரங்கள் எரிந்து நாசம்

    இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதியில் ஏறி, அங்குள்ள செடி, கொடிகளை கொண்டு தீயை அணைத்துக் கொண்டிருந்தனர். இந்த தீயால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து வனத்துறையினரும், இரவு முழுவதும் போராடி சுமார் 1.30 மணியளவில், தீயை முழுவதுமாக அனைத்து கட்டுப்படுத்தினர்.

    இருப்பினும் தீயில் சருவ மலையில் இருந்த பல்வேறு வகையான மரங்கள் எரிந்து நாசமாயின. இதுபோன்று சருவமலையில் அடிக்கடி தீ ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • மரங்கள் எரிந்து நாசம்
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தன்னார்வ சேவை அமைப்பினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காஞ்சி சாலையில் அமைந்துள்ளது கவுத் திமலை. இரும்பு தாது உள்ள இந்த மலை மற்றும் மலைப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் லட் சக்கணக்கான மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண் டும் கோடை காலத்தில், இந்த மலையில் தீ விபத்து ஏற்படுவதும் மரங்கள் அழிவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், கவுத் திமலையின் தென்மேற்கு திசையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, கிடுகிடுவென பரவியது. அதனால், மலைப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் தீயில் கருகி சாம்பலா னது. பல அடி உயரத் துக்கு தீ பற்றி எரிந்ததால், மலைப்பகுதியில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது.

    இந்த தீயில் சிக்கி, மான்கள், காட்டுப்பன் றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் உயிரிழந்தி ருக்கலாம் என தெரிகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே, கவுத்திமலை யில் காட்டுத் தீப்பற்றியிருப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில், தன்னார்வ சேவை அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனாலும் தீயை கட் டுக்குள் கொண்டு வரு வது கடும் சவாலாகவே உள்ளதாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரி வித்தனர்.

    மேலும், மலைப்பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோர், புகைப்பிடிக்க பற்ற வைக்கும் நெருப்பால், இது போன்ற விபத்துக்கள் ஏற் படலாம் அல்லது சமூக விரோதிகள் திட்டமிட்டு தீவைத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    • மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசம்
    • மலைப்பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

    பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் கார்த்திகை தீபத்தன்று வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் மலை மீது ஏறி ஸ்ரீ தவளகிரீஸ்வரரை தரிசனம் செய்கின்றனர்.

    இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

    மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. தவளகிரீஸ்வரர் மலை மீது மர்ம கும்பல் தீ வைப்பது தொடர் கதையாக நவருகிறது.

    அரியவகை மூலிகை செடிகள் மரங்கள் அதிகமாக இருக்கும் இந்த மலையை வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் பாதுகாக்கா மல் தொடர்ந்து அலட்சியமாக இருந்ததால் மர்ம கும்பல் மலை மீது தீ வைத்துள்தாக கூறப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் வனத்துறை அதிகாரிகள் மூலிகைச் செடிகள் நிறைந்த இந்த மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ×