search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கவுத்தி மலையில் பற்றி எரிந்த திடீர் தீ
    X

    திருவண்ணாமலை கவுத்தி மலையில் பற்றி எரிந்த திடீர் தீ

    • மரங்கள் எரிந்து நாசம்
    • தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தன்னார்வ சேவை அமைப்பினர், வனத்துறையினர் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை காஞ்சி சாலையில் அமைந்துள்ளது கவுத் திமலை. இரும்பு தாது உள்ள இந்த மலை மற்றும் மலைப்பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் லட் சக்கணக்கான மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண் டும் கோடை காலத்தில், இந்த மலையில் தீ விபத்து ஏற்படுவதும் மரங்கள் அழிவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில், கவுத் திமலையின் தென்மேற்கு திசையில் நேற்று மாலை ஏற்பட்ட தீ, கிடுகிடுவென பரவியது. அதனால், மலைப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்கள் தீயில் கருகி சாம்பலா னது. பல அடி உயரத் துக்கு தீ பற்றி எரிந்ததால், மலைப்பகுதியில் புகை மண்டலமாக காட்சிய ளித்தது.

    இந்த தீயில் சிக்கி, மான்கள், காட்டுப்பன் றிகள் உள்ளிட்ட வன விலங்குகளும் உயிரிழந்தி ருக்கலாம் என தெரிகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே, கவுத்திமலை யில் காட்டுத் தீப்பற்றியிருப்பது வன ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

    தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில், தன்னார்வ சேவை அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனாலும் தீயை கட் டுக்குள் கொண்டு வரு வது கடும் சவாலாகவே உள்ளதாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தெரி வித்தனர்.

    மேலும், மலைப்பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க செல்வோர், புகைப்பிடிக்க பற்ற வைக்கும் நெருப்பால், இது போன்ற விபத்துக்கள் ஏற் படலாம் அல்லது சமூக விரோதிகள் திட்டமிட்டு தீவைத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×