search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரவண பவன் ஓட்டல் அதிபர்"

    சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜீவஜோதி கூறினார். #SC #SaravanaBhavan #PRajagopal
    தஞ்சை:

    தஞ்சாவூரில் வசித்து வரும் அவர், நிருபருக்கு அளித்த பேட்டியில், ‘சுப்ரீம் கோட்டு தீர்ப்பு விவரம் (நேற்று) காலையில் தெரிந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை. அதே நேரம், அவர் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சரானார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட போது, அந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்தனர். ஒருவேளை ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன். போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

    கடந்த 2006-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை ஜீவஜோதி 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தஞ்சையில் வசித்து வருகிறார்கள். தண்டபாணி வெளிநாடுகளுக்கு ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதி செய்கிறார்.

    ஜீவஜோதி அதே பகுதியில் தையல் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். #SC #SaravanaBhavan #PRajagopal
    2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது #SC #SaravanaBhavan #PRajagopal
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு.

    சரவண பவன் ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஜீவஜோதியின் மீது அந்த ஓட்டலின் உரிமையாளரான சரவணபவன் ராஜகோபால் ஆசை வைத்ததும், இதன் தொடர்ச்சியாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்டதும் அந்த நேரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு இன்று உறுதி செய்துள்ளது.

    இதன் மூலம் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் மீண்டும் பேசப்படும் வி‌ஷயமாக மாறி உள்ளது.

    2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் அந்த வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது சினிமாவை மிஞ்சும் வகையிலான பரபரப்பான காட்சிகளும் அரங்கேறின.

    26.1.2001 நாகை மாவட்டம் தோத்தாக்குடி கிராமத்தை சேர்ந்த ஜீவஜோதி , சரவணபவன் ஓட்டலில் பணியாற்றியபோது பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வேளச்சேரியில் குடியேறி இருந்தார்.

    இருவரும் வசித்து வந்த வீட்டில் இருந்து பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி திடீரென மாயமானார்.

    31.1.2001 கணவர் மாயமானது பற்றி ஜீவஜோதி வேளச்சேரி போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்ஸ் சாந்தகுமாரை தேடி வந்தனர். ஜீவஜோதி அளித்த புகாரில் ராஜகோபாலும் அவரது ஆட்களும் தான் கணவரை கடத்திச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானல் மலைப்பகுதியில் கொடூரமாக கொலை செய்து வீசப்பட்டது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராஜகோபால் மற்றும் கொலைக்கு உடந் தையாக இருந்த 8 பேர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. ராஜகோபால் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் 2004-ம் ஆண்டு தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 8 பேருக்கும் 9 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.

    கடத்தல் வழக்கில் தனியாக தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டும், மற்றவர்களுக்கு 2 ஆண்டும் தண்டனை அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அனைவரும் ஐகோர்ட்டில் முறையிட்டனர். அதில் தங்களது தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதே நேரத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனை குறைவாக உள்ளது. எனவே அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



    2009-ம் ஆண்டு: இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 3 பேருக்கு மட்டும் கீழ் கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தனது தீர்ப்பில் பூந்தமல்லி கோர்ட்டு இந்த வழக்கில் தவறு இழைத்துவிட்டதாக அப்போது குற்றம் சாட்டி இருந்தனர்.

    29.3.2019: ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து ராஜகோபால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களையும், குற்றச்சாட்டுகளையும் வலுவாக முன்வைத்தனர்.

    இதனைதொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது. ராஜகோபாலுக்கு ஐகோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. ராஜகோபால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள இந்த தீர்ப்பு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SC #SaravanaBhavan #PRajagopal
    ×