search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுத்திரகனி"

    • 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
    • பவன் கல்யாண், சாய் தேஜ் நடிப்பில் உருவான இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.



    தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில் ப்ரோ திரைப்படம் ஐஎம்டிபி-யில் நல்ல வரவேற்பை பெற்று 10-க்கு 9 மதிப்பெண் பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
    • தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் . 


    தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியதாவது, 'ப்ரோ' நிகழ்ச்சிக்கு வந்த எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தக் கதையைக் கேட்டதும் சமுத்திரக்கனியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். ஏனென்றால் தெலுங்கு மொழியின் மீது நமக்கு பிடிப்பு மிகக் குறைவு. ஆங்கிலம் கலந்து பேசுவோம். 


    எனக்கு தெலுங்கில் பத்து வாக்கியம் கூட பேச வராது. இடையில் நான்கு ஆங்கில வாக்கியங்கள் பேசுவேன். அதை சரி செய்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் நமது மொழியும் கூட இல்லை, முதல் நாளே ஸ்கிரிப்ட் ரீடிங்கிற்கு போனார். தெலுங்கை கற்று கொண்டார். நீங்கள் தெலுங்கு கற்று இவ்வளவு செய்ததால். நான் தமிழ் கற்று ஒரு நாள் தமிழில் உரை நிகழ்த்துவேன். தமிழ் கற்று திருக்குறள் சொல்ல விரும்புகிறேன். தெலுங்கு மொழியைக் கற்று எங்கள் கண்களைத் திறந்தவர் நீங்கள். நீங்கள் தெலுங்கை நன்றாகக் கற்றுக்கொண்டீர்கள். நம் தாய்மொழியில் இலக்கியம் மிகவும் வளமானது. அது தெரிந்தால். பல சிறந்த படங்களை எடுக்கலாம். மேலும் நம் மொழியில் தேர்ச்சி பெற்று இப்படி ஒரு படத்தை எடுத்த சமுத்திரக்கனிக்கு நன்றி. தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம்.

    எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது தான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். 'ப்ரோ' படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் பேசினார். 

    தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அயோத்தி’.
    • அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    அயோத்தி

    இதையடுத்து அயோத்தி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் 50-வது நாள் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேசியதாவது, ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு உயிரோடி இருக்கும் ஒரு திரைப்படம் கிடைத்திருக்கிறது. சில திரைப்படங்கள் ஒரு 100 வருடம் பேசப்படும். ஆனால், அயோத்தி திரைப்படம் திரையுலகம் இருக்கும் வரை பேசப்படும்.


    அயோத்தி

    நானும் சசிக்குமாரும் பார்க்கும் பொழுது அவர் ஒரு நான்கு கதையை கூறினார். அதில், அயோத்தி திரைப்பட கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சரியான கதைகள் நடிகர்களையும் தயாரிப்பாளர்களையும் அது தேர்ந்தெடுக்கும். அப்படி தான் 'அயோத்தி' திரைப்பட கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. சசிகுமார் இந்த படத்தில் நடிக்கவே இல்லை. அவருடைய இயற்கையான குணமே அப்படிதான். சசிகுமாரின் மனதிற்கு ஏற்றவாறு ஒரு படம் இது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று கூறினார்.

    • பன்னையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன்.
    • இவரின் திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    விஜய் சேதுபதி நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான பன்னையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். அதன்பின்னர் ஆரஞ்சு மிட்டாய், ஒரு நாள் கூத்து, தொண்டன், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், மான்ஸ்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் இசையமைத்து கவனத்தை ஈர்த்தார்.

     

    சமுத்திரகனி, விஜய் சேதுபதி கலந்துக் கொண்ட ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்

    சமுத்திரகனி, விஜய் சேதுபதி கலந்துக் கொண்ட ஜஸ்டின் பிரபாகரன் திருமணம்

    இந்நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி மற்றும் பாடகர் கிரிஷ் கலந்துக் கொண்ட புகைப்படத்தை கிரிஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    ×