என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்"
- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணி வரன்முறையை செய்திட வேண்டும்.
- அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தருமபுரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறையை ஒரு மாத காலம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டர் தொகையை பில்லில் உள்ளது போல், முழு தொகையாக உடனடியாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பணி வரன்முறையை செய்திட வேண்டும். மேலும் அங்கன்வாடி மையப் பணிகளுக்கு வழங்கப்பட்ட செல்போன்கள் பழுதாகியுள்ளதால், புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல், மாவட்ட பணியிட மாறுதல் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.சி. பிரேம்குமார், மகேஷ்பாபு, கல்பனாசந்தர், தங்கவேலு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், ஜெயராமன், ஜீவானந்தம், கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் நிதியை குறைத்து சீர்குலைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.
100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தியும் கூலியாக 600 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும்.
இந்த திட்டத்திற்காக 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடக்கோரியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு சார்பதிவாளர்கள் சங்கம் திருப்பத்தூர் பதிவு மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூர் சார் பதிவாளர் கோ.நித்தியானந்தம், அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளரும் இரா.ரமேஷ்குமார் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட பதிவாளர் அலுவலகம் உதவியாளர் இரா.சேகர், முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே. எம். நேரு, மாவட்டச் செயலாளர் க.அருள்மொழிவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர், த.பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட செயலாளர்ஜி.திருமலை, திருப்பத்தூர் மாவட்டம் பட்டு வளர்ச்சி துறை தலைவர் க.ரா.ராஜ்குமார், கூட்டுறவுத்துறை மாவட்ட செயலாளர், கா.பூவண்ணன், உட்பட பலர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மக்கள் மனைகளாக பதி வதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உரு வாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், பதிவுத்துறையில் தனியார் மூலம் செயல்படுத்தி கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்து அரசு நிறுவனங்கள் மூலம் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர்கள் அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாவட்ட பதிவாளர் அலுவலகம், பெ.அருணா நன்றி கூறினார்.
- 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
தமிழ்நாடு சார்பதிவாளர்கள் சங்கம் திருப்பத்தூர் பதிவு மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூர் சார் பதிவாளர் கோ.நித்தியானந்தம், அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு சார் பதிவாளர்கள் சங்க மாவட்ட அமைப்பாளரும் இரா.ரமேஷ்குமார் தலைமை வகித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட பதிவாளர் அலுவலகம் உதவியாளர் இரா.சேகர், முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் கே. எம். நேரு, மாவட்டச் செயலாளர் க.அருள்மொழிவர்மன், மாநில செயற்குழு உறுப்பினர், த.பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட செயலாளர்ஜி.திருமலை, திருப்பத்தூர் மாவட்டம் பட்டு வளர்ச்சி துறை தலைவர் க.ரா.ராஜ்குமார், கூட்டுறவுத்துறை மாவட்ட செயலாளர், கா.பூவண்ணன், உட்பட பலர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், ஏழை, எளிய மக்கள் மனைகளாக பதி வதில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், அதிகரித்து வரும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உரு வாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், பதிவுத்துறையில் தனியார் மூலம் செயல்படுத்தி கொண்டிருக்கும் ஒப்பந்த வெளி முகமை வேலைகளை ரத்து செய்து அரசு நிறுவனங்கள் மூலம் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் சார்பதிவாளர்கள் அமைச்சுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாவட்ட பதிவாளர் அலுவலகம், பெ.அருணா நன்றி கூறினார்.
- விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் சிஐடியு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்க கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும், இந்திய நாட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக உயர்த்தி 600 ரூபாய் கூலி வழங்கிட வேண்டும், பீடி தொழிலாளர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தசரதன், மார்க்கபந்து, அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் குணசேகரன், பீடி சங்க மாவட்ட குழு உறுப்பினர் சிலம்பரசன், விவசாய சங்க செயலாளர் கோபால், பீடி சங்க தலைவர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாவட்ட துணை தலைவர் காத்தவராயன் முடித்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்