என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
- 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.சி. பிரேம்குமார், மகேஷ்பாபு, கல்பனாசந்தர், தங்கவேலு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், ஜெயராமன், ஜீவானந்தம், கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் நிதியை குறைத்து சீர்குலைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.
100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தியும் கூலியாக 600 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும்.
இந்த திட்டத்திற்காக 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடக்கோரியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்