search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஆனந்தன் தலைமை தாங்கினார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.சி. பிரேம்குமார், மகேஷ்பாபு, கல்பனாசந்தர், தங்கவேலு, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், ஜெயராமன், ஜீவானந்தம், கவிதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் நிதியை குறைத்து சீர்குலைத்து வரும் மத்திய அரசை கண்டித்தும்.

    100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்தியும் கூலியாக 600 ரூபாய் வழங்கிட வலியுறுத்தியும்.

    இந்த திட்டத்திற்காக 2 லட்சத்து 72 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடக்கோரியும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×