என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் இடம்"
- உசிலம்பட்டி அருகே கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
- உசிலம்பட்டி அருகே கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்ப நாயக்கனூர். இந்த கிராமத்தில் பழமையான ஒட்டக்கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள், நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர கோரி தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்கு உட்பட்ட 13 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையில், உசிலம்பட்டி முருகன் கோவிலில் இருந்து கோட்டாட்சி யர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்களிடம் தெரிவித்தார்.
- கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
- 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னக் காவனத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னக் காவனம், பெரிய காவனம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலம் காலமாக கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தான் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்டும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி 12 கிராம மக்கள் சார்பில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 12 கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்