search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிக்கொண்டை"

    • பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை.
    • ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது.

    திருப்பூர்:

    குறைந்த முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, தினசரி வருமானம் போன்ற காரணங்களால் கணிசமான விவசாயிகள் கோழிகொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாலை கட்ட கோழி கொண்டை பூக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

    தேவைக்கு அதிகமான உற்பத்தி, பிற பூக்களின் விலை வீழ்ச்சி, தேவை குறைவு போன்ற காரணங்களால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை வரை கோழி கொண்டை பூக்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது. அதன்பின் பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் மாடுகளை மேய விட்டும், செடிகளை அழித்தும் வருகின்றனர். இதனால் பூ சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கோழிக்கொண்டை பூ சாகுபடி விவசாயிகள் சிலர் கூறுகையில், ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது. அசல் கூட தேறவில்லை. எனவே வேறு வழியின்றி அவற்றை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்றனர். 

    • கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது.
    • வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக் கொண்டை பூச்சொடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டு க்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

    ×