search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை வீழ்ச்சியால் கோழிக்கொண்டை பூக்களை பறிக்காமல் மாடுகளை மேய விடும் விவசாயிகள்
    X

    கோப்புபடம்

    விலை வீழ்ச்சியால் கோழிக்கொண்டை பூக்களை பறிக்காமல் மாடுகளை மேய விடும் விவசாயிகள்

    • பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை.
    • ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது.

    திருப்பூர்:

    குறைந்த முதலீடு, பராமரிப்பு செலவு குறைவு, தினசரி வருமானம் போன்ற காரணங்களால் கணிசமான விவசாயிகள் கோழிகொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மாலை கட்ட கோழி கொண்டை பூக்கள் அதிக அளவில் பயன்படுகிறது.

    தேவைக்கு அதிகமான உற்பத்தி, பிற பூக்களின் விலை வீழ்ச்சி, தேவை குறைவு போன்ற காரணங்களால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை வரை கோழி கொண்டை பூக்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது. அதன்பின் பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. பறிப்பு கூலி கூட கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் மாடுகளை மேய விட்டும், செடிகளை அழித்தும் வருகின்றனர். இதனால் பூ சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    கோழிக்கொண்டை பூ சாகுபடி விவசாயிகள் சிலர் கூறுகையில், ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரையே விலை போகிறது. அசல் கூட தேறவில்லை. எனவே வேறு வழியின்றி அவற்றை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என்றனர்.

    Next Story
    ×