search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபியில்"

    • கிரிவாயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கோபி அருகே மொடச்சூர் பகுதி அண்ணா நகரை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் கிரிவாயன் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×