search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை அமீர்"

    • முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
    • அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டு தோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    முகமது ஜூபேர் 'ஆல்ட் நியூஸ்' என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.


    அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.

    இவ்வாறு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் முகமது ஜூபேரை பாராட்டும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.

    விருது பெற்ற முகமது ஜூபேர் பேசியதாவது:-

    "தமிழ்நாடு அரசிடம் இருந்து மத நல்லிணக்க விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்த இத்தகைய அங்கீகாரம் பெறுவது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி!" தெரிவித்தார்.

    • 2020-ம் ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது "என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டு தோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது.

    இப்பதக்கம் பெறுபவர்களுக்கு பதக்கமும், ரூ.25,000-ற்கான கேட்புக் காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜூபேருக்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

    முகமது ஜூபேர் 'ஆல்ட் நியூஸ்' என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.


    அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.

    கடந்த 2023-ந் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி உள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது 'ஆல்ட் நியூஸ்' இணையதளம் மூலம் வெளியிட்டு தமிழ் நாட்டிற்கு எதிராக வதந்தி பரப்பி வருவதைத் தடுத்து தமிழ்நாட்டில் சாதி, மத, இனமற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாதவண்ணம் செயல்பட்டுள்ளார்.

    இவ்வாறு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் முகமது ஜூபேரை பாராட்டும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.

    மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து, அதிக உற்பத்தித்திறன் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ரொக்கப் சிறப்பு பரிசு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை, 2011-2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட ஆணையிடப்பட்டுள்ளது.

    இவ்விருது, 2020-ம் ஆண்டு முதல் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது "என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கிராமம், சின்னப் பில்லுக்குறிச்சியைச் சேர்ந்த சி.பாலமுருகன் என்னும் விவசாயி, 2022-23-ம் ஆண்டிற்கான இவ்விருதைப் பெற்றிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விவசாயி வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில் நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று, அதன் அடிப்பையில் திருந்திய நெல் சாகுபடியை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்.

    அவரது நெல் வயல், மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், 11.01.2023 அன்று அறுவடை செய்யப்பட்டதில், எக்டருக்கு 13,625 கிலோ நெல் உற்பத்தி திறன் கிடைக்கப் பெற்றுள்ளது.

    இந்த உற்பத்தித்திறன். மாநிலத்திலேயே முதன்மையாக இருப்பதால், இந்த விவசாயி 2022-2023-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு தகுதியுடையவர் ஆகிறார்.

    திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகக் கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி. சி.பாலமுருகனை பாராட்டிப் போற்றும் வகையில், இவருக்கு 2023-ம் ஆண்டின் சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

    ×