search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை சமையல்"

    • மோரை கோடைக்காலங்களில் தான் அதிகம் பருகுவோம்.
    • இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்

    தண்ணீர் - 1 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    மோர் மிளகாய் - 1

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - அரை டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...

    பச்சை மிளகாய் - பாதி

    கறிவேப்பிலை - 3 இலை

    இஞ்சி - 1/4 இன்ச்

    செய்முறை:

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்த பின் மோர் மிளகாயை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×