search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடூரமாக தாக்கிய"

    • விஜயகுமார் ( 32), இவரது மனவைி சந்தியா (27), இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், அதன்படி நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
    • இதையடுத்து விஜய குமாைர, சந்தியா கட்டையால் சரமாரியாக தாக்கினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிப்பாளையம் அவி னாசிப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( 32), இவரது மனவைி சந்தியா (27), இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், அதன்படி நேற்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சரமாரி தாக்குதல்

    இதையடுத்து விஜய குமாைர, சந்தியா கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை குலைந்த விஜய

    குமார் படுகாயம் அடைந்து கதறினார். இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் அவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜயகுமார் எலச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் ேபரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தியாவை கைது செய்தனர். தொடர்ந்து திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர் படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைக்க அவரை அழைத்து வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    சேலம் மத்திய சிறை அருகே வந்த போது மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறிய சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×