search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையுந்து"

    • ஆ.தெக்கூரில் மகளிர் கையுந்து பந்து போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூரில் செயல்பட்டு வரும் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காளாப்பூர் வாலிபால் நண்பர்கள் மற்றும் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாலாஜி ஆசை நண்பர்கள் சார்பில் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அய்யனார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இப்போட்டியில் முதல் பரிசை மதுரை அமெரிக்கன் கல்லூரியும், 2-ம் பரிசை மதுரை லேடி டோக் கல்லூரியும், 3-ம் பரிசை ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கல்லூரியும், 4-ம் பரிசை மதுரை யாதவா கல்லூரியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவி களுக்கு கல்லூரி முதல்வர் உமா பரிசு மற்றும் சான்றி தழ்களை வழங்கினார்.

    ×