என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கை பை"
- 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
- பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை தனியார் பேக்கரியில், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தேநீர் அருந்திவிட்டு அவர் கொண்டு வந்த, கை பையை மறந்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்த பேக்கரி ஊழியர் பிரவீன் கைப்பை இருப்பதைப் பார்த்தவர், அதனை எடுத்துக் கொண்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில், நடந்த சம்பவத்தை கூறி ஒப்படைத்தார். போலீசார் அந்த கைப்பையை சோதனை யிட்டபோது அதில் 1 மடிக்கணினி,8 வங்கி பணமாற்ற அட்டைகள், (ஏடிஎம் கார்டு ) உள்ளிட்டவை இருந்தது.
இதையடுத்து அதில் இருந்த முகவரியை பார்த்தபோது, சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ஆசாத் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். இதையடுத்து நேற்று அவர் பல்லடம் போலீஸ் நிலையம் வந்து, தன்னுடைய கைப்பையை அடையாளம் காட்டி பெற்றுச் சென்றார். மேலும் கைப்பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பேக்கரி ஊழியருக்கு நன்றி தெரிவித்தார். போலீசார் மற்றும் அங்கிருந்தவர்கள் பேக்கரி ஊழியரை பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்