search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.
    • நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

    நெல்லை:

    சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. பொதுவாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்தியாவில் சந்திரன் தோன்றுவதற்கு முன்னதாக கிரகணம் தோன்றுவதால் அதனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு குறைவு.

    சிறப்பு ஏற்பாடு

    எனினும் கிரகணம் முடிந்த பின்னரும் இரவு 7 மணி வரை சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் காட்சியை பார்க்கலாம். கிரகணத்தையொட்டி பொதுமக்கள் பார்க்கும் வகையில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக அறிவியல் மையத்தில் டெலஸ்கோப் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு பைனாகுலார் உள்ளிட்ட தொலைநோக்கி கருவிகள் மூலம் சந்திர கிரகணத்தை காணலாம் என அறிவியல் மைய அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

    கோவில் நடை அடைப்பு

    இந்நிலையில் சந்திர கிரகணத்தையொட்டி நெல்லையில் உள்ள கோவில்களில் பிற்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இதனால் மாலையில் கோவில் நடைகள் திறக்கப்படாது. டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு முன்னதாக அன்னா பிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்பட்டது. மாலை 6.30 மணிக்கு கோவில் உள் தெப்பத்தில் சிறப்பு தீர்த்தவாரி நடத்தப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரி வித்தனர்.

    ×