search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி"

    • நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
    • பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.
    • ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற்ற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

    அதன்படி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். வருகிற 19-ந்தேதி நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பின்னர், 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.
    • 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தப் போட்டி நடக்கிறது.

    வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

    36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டுகள் நடக்கிறது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தமிழக அணி தேர்வு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குத்துச்சண்டை, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், களரிபயட்டு, நீச்சல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடந்தது.

    இறகுப்பந்து, மல்யுத்தம், களரிபயட்டு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.

    இறகுப்பந்து நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்யுத்தம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும், களரி பயட்டு கோவை நேரு ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் வீரர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழுடன் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×