search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வருகிற 14-ந் தேதி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தேர்வு போட்டிகள்
    X

    வருகிற 14-ந் தேதி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தேர்வு போட்டிகள்

    • வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.
    • 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தப் போட்டி நடக்கிறது.

    வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

    36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டுகள் நடக்கிறது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான தமிழக அணி தேர்வு போட்டிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குத்துச்சண்டை, பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், களரிபயட்டு, நீச்சல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடந்தது.

    இறகுப்பந்து, மல்யுத்தம், களரிபயட்டு ஆகிய விளையாட்டுகளுக்கான தேர்வு வருகிற 14-ந் தேதி காலை 7 மணிக்கு நெல்லை, திருச்சி, கோவையில் நடக்கிறது.

    இறகுப்பந்து நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிலும், மல்யுத்தம் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கிலும், களரி பயட்டு கோவை நேரு ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் வீரர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழுடன் இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×